மக்கா மற்றும் மதீனாவில் லட்சக் கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பு!

ரியாத் (23 அக் 2021): மக்கா மற்றும் மதீனா பெரிய மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு முழு நுழைவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மக்கா மதீனாவில் பிரார்த்தனைகளில் இப்போது சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப் பட்டது. அதேவெளை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விரிவான வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், டாக்டர். மாஹிர் அல்-முய்கிலி ஜும்ஆவை வழிநடத்தினார். ஜும்ஆவுக்கு…

மேலும்...

குவைத் மசூதிகளில் தொழுகையில் சமூக இடைவெளிக்கு விலக்கு!

குவைத் (22 அக் 2021): குவைத் மசூதிகளில் தொழுகையில் தோளோடு தோள் நின்று தொழ வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவைத்தில் கொரோனா பரவலிலிருந்து ஓரளவுக்குக் கட்டுக்குள் உள்ள நிலையில், படிப்படியாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, தொழுகைகளில் இருந்து மசூதிகளில் சமூக தூரத் தேவையை விலக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல், ,தொழுகையின்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற…

மேலும்...

மீலாது நபியை முன்னிட்டு துபாயில் இலவச பார்க்கிங் வசதி!

துபாய் (21 அக் 2021): மீலாது நபியை முன்னிட்டு முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளில் இலவச பார்க்கிங். மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை டெர்மினல்களைத் தவிர, பொது பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. சாலை, நீர் போக்குவரத்து மற்றும் சேவை மையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியில் புறப்படுவதற்கு முன்பு இணையதளத்தில் மறுசீரமைக்கப்பட்ட நேரத்தை சரிபார்க்க வேண்டும்…

மேலும்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் – சவூதி சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரியாத் (21 அக் 2021): 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவதற்கு சவூதி சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே தீவிர உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் கோவிட் வளரும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு கோவிட் பூஸ்டர் ஊசி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் பூஸ்டர் ஊசி வழங்க சவூதி சுகாதாரத்துறை…

மேலும்...

சவுதியில் இறந்த தமிழரின் உடல் IWF உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

ரியாத் (08 அக் 2021): சவூதியில் ரியாத்தில் இறந்த சண்முகம் அவர்களின் உடலை தயாகம் அனுப்பிய இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம். விமான நிலையம் வந்த உடலை கோவை தமுமுக மமக உதவியால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சவுதி அரேபியா ரியாத் நியூசெனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28-09−2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். .அவருடன் பணிபுரிந்த,…

மேலும்...

மக்காவில் உம்ரா செய்ய கூடுதல் வசதிகளுடன் யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (30 செப் 2021): புனித மக்காவில் உம்ரா செய்வதற்கு கூடுதல் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்படுகளில் இருந்த உம்ரா யாத்திரைகான கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் முன் அனுமதியின் அடிப்படையில் முன்பை விட அதிக யாத்ரிகர்கள் மக்காவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் யாத்ரீகர்கள் மக்கா ஹரமுக்குள் நுழைய காபாவின் முற்றத்தில் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ள.. மேலும் பிரார்த்தனைக்கும் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ள. தற்போது, ​​மக்காவுக்கு தினமும் 60,000…

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தம்!

புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன. இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து…

மேலும்...

துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...

சவூதியில் 200 க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு!

ரியாத் (01 செப் 2021): சவூதியில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி சுகாதார அமைசகத்தின் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 185 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன மேலும் 7 பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இது சவூதியில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 544,634 ஆகவும், வைரஸ் தொடர்பான மரணம் 8,552 ஆகவும் உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 301 பேர் குணமடைந்துள்ளனர், இதனால்…

மேலும்...