12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளால் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் கவலை!

ரியாத் (31 ஜூலை 2021): சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் தேர்வுகள் நடக்கவில்லை. எனினும் தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், பலர் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள், உயர்கல்வி வாய்ப்பை சிதைப்பதாக மாணவர்களும்…

மேலும்...

கத்தாருக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 2 முதல் புதிய வழிமுறைகள் அமல்!

தோஹா (30 ஜுலை 2021): கத்தாருக்கு இந்தியா உட்பட ஆறு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வரும் ஆகஸ்ட் 2 முதல் அமலுக்கு வருகின்றன. இதுகுறித்து இந்திய தூதரகம் இந்திய பயணிகளுக்கு விடுத்துள்ள உத்தரவின்படி, கத்தாரில் தடுப்பூசி போடப்பட்டது குறித்து ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு நாள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். இரண்டாவது நாளில், RTPCR சோதனை எடுத்து கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்துவிடலாம்.. அதேவேளை கத்தாருக்கு வெளியில் இருந்து…

மேலும்...

ஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகள் சவூதி வர அனுமதி!

ரியாத் (30 ஜுலை ): 17 மாதங்களக்குப் பின்னர் இரண்டு அளவு கோவிட் தடுப்பூசி எடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதிக்கான, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக நுழைவுத் தடையை ஆகஸ்ட் 1 முதல் நீக்குவதாக சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது சவுதி அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மொடெனா, ஜான்சன்…

மேலும்...

வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு குறைத்தது. இது முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தைவிட 30% முதல் 50% வரையாகும். கோவிட் காரணமாக. வளைகுடாவில் இந்தியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றிய அரசின் முந்தைய இந்த உத்தரவு வெளிநாட்டில்…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயணத்தடை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

துபாய் (28 ஜுலை 2021): இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட் 7 வரை விமானங்களை இயக்கப்போவதில்லை என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எமிரேட்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விடுமுறையில் இந்தியாவுக்குச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு…

மேலும்...

கத்தார் பயணம் செய்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தோஹா (27 ஜூலை 2021): கோவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தார் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. கத்தாருக்கு பயணம் செல்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி www.gco.gov.qa/en/travel என்ற இணைய தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப் பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. பயணிகள் புறப்படும் நாடு, கோவிட் நிலை, உடன் வரும் குழந்தைகள் மற்றும் சமீபத்தில் சென்ற நாடுகள்,…

மேலும்...

துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...

மக்காவில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (26 ஜூலை 2021): அடுத்த மாதம் (முஹர்ரம்) முதல் வெளி நாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதிளிக்கப்படுகிறார்கள். கோவிட் பரவல் காரணமாகவும், விமான தடை காரணமாகவும் வெளிநாட்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரிகர்களுக்கு மக்கா மற்றும் மதினாவில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கும் உம்ரா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டில் (சவுதியில் ) வசிப்பவர்களுக்கு மட்டுமே ஹஜ் மற்றும் உம்ராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவ்வருடம் 60ஆயிரம்…

மேலும்...

மூன்றவது டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியமா? – சுகாதாரத்துறை விளக்கம்!

ரியாத் (25 ஜூலை 2021): தற்போதைய சூழ்நிலையில், கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகள் போதுமானதாக இருக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வின்படி, மூன்றாவது டோஸ் இப்போது தேவையில்லை, பின்னர் எதிர்காலத்தில் இதுகுறித்த அவசியம் குறித்து அறிவிக்கப்படும். இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு டோஸ் போதாது. தற்போது, ​​10,829 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1530 பேர் ரியாத்தில் சிகிச்சை பெறுகின்றனர். ஜிதாவில் 653 பேர் , மக்காவில், 540 பேர் தம்மாமில் 519…

மேலும்...

சவூதி நாட்டினருக்கு நிகரான மருத்துவ சிகிச்சைக்கு தகுதியான வெளிநாட்டினர்!

ரியாத் (25 ஜூலை 2021): பதினொரு வகை வெளிநாட்டினர், சவுதி நாட்டினரைப் போலவே மருத்துவ சிகிச்சையும், சுகாதார சேவையும் பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சவூதி நாட்டின் தேசிய குடிமக்களுக்கு நிகரான முழு சுகாதார மற்றும் சிகிச்சையைப் பெறும் வெளிநாட்டினரின் பட்டியலை ஒருங்கிணைந்த தேசிய தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி சவுதி நாட்டினரின் வெளிநாட்டு மனைவிகள், சவுதி பெண்களின் வெளிநாட்டு கணவர்கள், அவர்களின் குழந்தைகள், வீட்டுப் பணியாளர்கள், கைதிகள், சமூக முகாம்களில் உள்ள மூத்தவர்கள், என அரசாங்கத்தின் செலவில்…

மேலும்...