விடுமுறையில் ஊர் சென்று துபாய் திரும்பி செல்ல இயலாதவர்களுக்கு முக்கிய தகவல்!

துபாய் (03 ஜூலை 2021): கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் அமீரகம் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்போருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Residence visa புதுப்பித்துக் கொள்ள ஒரு வலைதளம் அறிவித்துள்ளது. அதன் மூலம், அமீரகத்திற்கு வெளியே உள்ளோர் எந்தவிதக் கட்டணமும் இன்றி, இருந்த இடத்திலேயே எளிதாக  தங்களுடைய இணையம் மூலம் விசாவை புதுப்பித்து கொள்ளலாம்….

மேலும்...

முதலிடம் பிடித்த கத்தார் நேஷனல் வங்கி!

தோஹா (03 ஜூலை 2021): மத்திய கிழக்கில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது. கத்தார் நேஷனல் வங்கி உலகளவில் 79 வது இடத்தில் உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா உள்ளிட்ட மேனா பிராந்தியத்தின் முதல் 1000 வங்கிகளில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, முன்னணி வங்கி பத்திரிகைகளில் ஒன்றான தி பேங்கர் பத்திரிகையில் வெளியிதப்பட்ட பட்டியலில் உள்ளது. இந்த பட்டியல் தரவரிசை மொத்த சொத்துக்கள்,…

மேலும்...

சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – 5 நாடுகளுக்கான பயணத் தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும். பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்...

பல்வேறு மதங்களிலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய 2000 பேர்!

துபாய் (28 ஜூன் 2021) பல்வேறு நாடுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்த 2021 ஆண்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் (ஐ.ஏ.சி.ஏ.டி) கீழ் செயல்பட்டு வரும் முகமது பின் ரஷீத் மையம் ஆகும். இது, பொதுமக்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அதன் சகிப்புத்தன்மையுள்ள போதனைகளையும் கற்பிக்கும் அறக்கட்டளையாகும். இது, இஸ்லாமிய மதத்தைப் பற்றி தெரிந்து…

மேலும்...

சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை. மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக…

மேலும்...

குவைத் இந்திய தூதரகம் மூடல்!

குவைத் (26 ஜூன் 2021): ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூதரக செயல்பாடுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை, அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தூதரக சேவைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப்…

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...