துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...

ரியாத் தமிழர்களை மகிழ்வித்த தமிழர் திருநாள்!

ரியாத் (29 ஜன 2020): தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் என்ற முழக்கத்துடன் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் விழாவை, ரியாத்திலுள்ள கஸர் அல் அரப் (அரபகக் கோட்டை) மண்டபத்தில் கடந்த 24 ஜனவரி அன்று நடத்தியது. 2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் அருண் சர்மா விழா…

மேலும்...

ஜித்தா இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தினம்!

ஜித்தா (28 ஜன 2020): ஜித்தா இந்திய தூதரகத்தில் கடந்த 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சவூதி வெளியுறவுத்துறை அதிகாரி ஹானி காஷிஃப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்களும் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சுல் ஜெனரல் பேசுகையில், இந்தியா சவூதி அரேபியா இடையேயான உறவுகள் குறித்தும், மெக்கா வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு கொடுக்கும் மதிப்பு வாய்ந்த உபசரிப்புகள் குறித்தும் வாழ்த்தி…

மேலும்...

அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார்?

பாக்தாத் (27 ஜன 2020): ஈராக்கின் பாக்தாதில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. இதில், தூதரகத்தின் உணவு விடுதியை ஒரு ஏவுகணை தாக்கியது. மற்ற இரண்டு ஏவுகணைகள் தூதரகத்திலிருந்து சற்று தொலைவில் விழுந்தன என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எதிர்பாராத இத் தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் படு காயமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால்…

மேலும்...

சவூதி ஜித்தாவில் சினிமா நட்சத்திரங்கள் களமிறங்கும் மெகா ஷோ!

ஜித்தா (27 ஜன 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் பிரபல மலையாள சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறும் மெகா ஷோ, எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. சவூதி பொழுதுபோக்குத் துறை ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல பிரபல இசைக் கலைஞர்கள், காமெடி நடிகர்கள் உட்பட 100 கலைஞர்கள் பங்கு பெற்று மகிழ்விக்க உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம்…

மேலும்...

கத்தார் நாட்டில் துவங்கியது தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு!

தோஹா (27 ஜன 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டில் வரும் திங்கள் கிழமை (இன்று) முதல் தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு துவங்குகிறது. தேசிய முகவரிச் சட்டம் (National Address Law) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்தப் பதிவேடு மூலம், கத்தர் நாட்டுப் பிரஜைகள் மற்றும் கத்தரில் தங்கியுள்ள வெளிநாட்டவர் அனைவரும் இன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும். இதனை உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு…

மேலும்...

BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த…

மேலும்...

மிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்!

கத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் நாடு முழுக்க துரிதமாகச் செய்து வருகிறது கத்தார். அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில் 1,616 அறைகளைக் கொண்ட பிரம்மாணமான மிதக்கும் ஹோட்டல்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கத்தாரா நிறுவனம் இதற்கான உரிமையைப்…

மேலும்...