ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள்…

மேலும்...

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை குறிவைத்து திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். ஈத் தினத்தன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதியின் முன் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது மற்றும் மிகவும் ஆத்திரமூட்டும்…

மேலும்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் ‘சீ வேல்ட் அபுதாபி’ நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது விழாவில் எமிரட்டி சூப்பர் ஸ்டார் உசேன் அல் ஜாஸ்மின் மற்றும் ஸ்காட்ரிஸ்ட் ரெக்கார்டிங் கலைஞர் ரேட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன மேலும் 120 இசைக் கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது இந்த தீம் பார்க் இன் பொது மேலாளர் தாமஸ்…

மேலும்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம், நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுவதற்கு, எந்த அனுமதியும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ரமலானில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ரமலான் 1 முதல் 19 வரையிலான நாட்களில், அதிகாலை 2.30 முதல் சுப்ஹு தொழுகை வரையிலும், முற்பகல் 11.30 முதல்…

மேலும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில் வருபவர்களை புதுப்பிக்க முடியாது. காலக்கெடுவுக்குப் பிறகு அவர்கள் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் நூறு ரியால்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வருட மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசாவில் விண்ணப்பிப்பவர்கள் சவுதி அரேபியாவில் அதிகபட்சம் 90…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர். பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம்…

மேலும்...