சூட்டிங்கின் போது தவறாக தொட்ட நபர் – பளார் விட்ட பொன்னியின் செல்வன் நடிகை!

சென்னை (07 டிச 2022): சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டதாகவும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி பிரபலமானார். தற்போது கடந்த வாரம் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் காமெடி கலக்கலாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்நிலையி ஒரு…

மேலும்...

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்!

சென்னை (07 டிச 2022): அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

மேலும்...

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக – ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸால் முன்மொழியப்பட்ட ‘மேன்-டவ்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகம்…

மேலும்...

பாஜகவில் விழும் அடுத்த விக்கெட் – நெருக்கடியில் அண்ணாமலை!

சென்னை (06 டிச 2022): பாமகவில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் பாமகவில் இணையவுள்ளார். பாஜக செயல்பாடுகளில் கடுமையாக அதிருப்தி அடைந்ததால், தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் பாமக தலைமையின் அழைப்பை ஏற்று மீண்டும் பாமகவில் இணையவுள்ளார். தமிழக பஜகவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு பல அதிரடி மாற்றங்களை செய்தார். இது கட்சியின் மூத்த தலைவர்களுக்கே பிடிக்காமல்…

மேலும்...

வங்கக்கடலில் புயல் சின்னம்!

சென்னை (06 டிச 2022): வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலைக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்போது காற்று தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா திடீர் அறிவிப்பு!

சென்னை (06 டிச 2022): சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் பாஜக நிர்வாகி டெய்சியை செல்போனில் ஆபாசமாக சூர்யா திட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இந்த…

மேலும்...

ஜெயலலிதா இறந்த நாள் நல்ல நாளா? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை (06 டிச 2022): ஜெயலலிதா இறந்த நாளான நேற்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனீஆக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி உறுதி மொழியை வாசிக்கும்போது, ‘அம்மா இறந்த நன்னாளில்’ என்று வாசித்தார். இதனை அதிமுகவினரும் சேர்ந்து வாசித்தனர். அதிமுகவினரின் அபிமானத்திற்குரிய அம்மாவின் இறந்த நாள் எப்படி நன்னாளாக இருக்க முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமியை…

மேலும்...

டிசம்பர் 6 தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் – திருமாவளவன் அறிக்கை!

சென்னை (06 டிச 2022): டிசம்பர் 6 ஐ தலித் இஸ்லாமிய எழுச்சி நாளான இன்று சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது, இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: *திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில்*, அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி…

மேலும்...

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள்…

மேலும்...

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில்…

மேலும்...