தமிழகத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு சென்றவர்கள் எத்தனை தெரியுமா?

சென்னை (07 ஏப் 2020): தமிழகத்தில் இதுவரை 19 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : 5,305. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல்…

மேலும்...

ஊரடங்கில் உறைந்து போயிருக்கும் ஏழைகளுக்கு உதவிய மேலக்காவேரி முஸ்லிம்கள்!

கும்பகோணம் (06 ஏப் 2020): ஊரடங்கு உத்தரவால் உறைந்து போயிருக்கும் ஏழை மக்களுக்கு மேலக்காவேரி முஸ்லிம் அமைப்பினர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதனால் வீடற்றோர், விதவைகள், தினசரி கூலியாட்கள், வயோதிகர்கள், சில பல ஏழைக் குடும்பத்தினர்கள் உணவுக்கு வழியின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் விதமாக மேலக்காவேரி முஸ்லிம் பரிபாலன சபை (MMWA) உறுப்பினர்கள், கும்பகோணம், மேலக்காவேரி, சுவாமிமலை பகுதியில் உள்ளோருக்கு…

மேலும்...

தீபம் ஏற்றும் போது தீ விபத்து – பதறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!

சென்னை (06 ஏப் 2020): சென்னை எண்ணூரில் கொரோனாவை எதிர்த்து தீபம் ஏற்றியபோது விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் ஏப்ரல்…

மேலும்...

மெழுகு வர்த்தியுடன் வீதிக்கு வந்த ரஜினி!

சென்னை ( 05 ஏப் 2020): உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று…

மேலும்...

இரண்டு வைரஸ்களையும் வெல்வோம் – மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளுக்கு பிரபல இயக்குநர் எதிர்ப்பு!

சென்னை (05 ஏப் 2020): பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நிராகரித்துள்ள இயக்குநர் கரு.பழனியப்பன், இரண்டு வைரஸ்களையும் அறிவியல் துணை கொண்டு வெல்வோம் என்று தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர்…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு!

நெல்லை (05 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முஸ்லிம்கள் காரணம் என்ற அவதூறுகள் பரப்பலும் ஒருபுறம் வந்தபடி உள்ளன. இதில் மரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து பல்வேறு…

மேலும்...

எப்பா தமிழகத்தில் இறைச்சி விலை கிலோ இவ்வளவா?

சென்னை (05 ஏப் 2020): தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப் பட்டுள்ளதால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் வரத்து குறைந்துள்ளடு. இதனால் இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆடு இறைச்சியின் விலை கிலோ ரூ 1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மேலும்...

தினமணியின் நேர்கொண்ட பார்வை தகனம் செய்யப் பட்டுவிட்டது – ஜவாஹிருல்லா பகிரங்க கடிதம்!

சென்னை (04 ஏப் 2020): மததுவேஷத்துடன் வந்துள்ள தினமணியின் தலையங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா தினமணிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதுகுறித்த அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மன்னிக்கக்கூடாத குற்றம்’ என்ற தலைப்பில் 4.4.2020 தேதியிட்ட தினமணியின் தலையங்கம், உண்மைக்குப் புறம்பானதாகவும், மதவெறுப்பை விதைப்பதாகவும் அமைந்துள்ளது. மனிதகுலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாகக் கிளம்பியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா தீநுண்மிக்கெதிராக சாதி, மத, தேச எல்லைகள் கடந்து உலகு தழுவிய அளவில் மனித சமுதாயம்…

மேலும்...