திமுக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை (22 ஜன 2020): ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரிவர செயல்படாத நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. நிர்வாகிகள் பேசி முடிந்த பின்பு இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது: வாழ்வா, சாவா…

மேலும்...

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ரஜினி!

சென்னை (22 ஜன 2019): தந்தை பெரியார் குறித்து முழுமையாக தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர்….

மேலும்...

பெரியார் விவகாரத்தில் கி. வீரமணியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் விவகாரத்திற்கு நடிகர் ரஜினி 2002 ஆம் ஆண்டே மன்னிப்பு கோரியுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தில் வந்த ராஜ்யமா என்ற பாடலில் வரும் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி” என்ற வரிக்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அந்த வரியை நீக்க கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த ரஜினி,” கேசட்டில் தவறுதலாக இடம் பெற்றுவிட்டது படத்தில் இடம்பெறாது தவறுக்கு மன்னிக்கவும்” என்று தெரிவித்திருந்தார். பெரியார் விவகாரத்தில் அன்று…

மேலும்...

ரஜினிக்கு அதிமுக அமைச்சர் கண்டனம்!

சென்னை (21 ஜன 2020): ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார். துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில…

மேலும்...

வடமாநிலமாக மாறும் தமிழகம் – மூன்றாம் வகுப்பு சிறுமி வன்புணர்ந்து கொலை!

சிவகாசி (21 ஜன 2020): சிவகாசி அருகே மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிவகாசி, கொங்கலாபுரத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 3ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மாயமானார். சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், இன்று காலை முட்புதர் அருகே, அந்த சிறுமி சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன. சிறுமியின் உடலை கைபற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக…

மேலும்...

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டுமா? – அமைச்சர் விளக்கம்!

சென்னை (21 ஜன 2020): “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும். 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று…

மேலும்...

ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்: கி.வீரமணி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு “மன்னிப்பு கேட்க முடியாது!” என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு…

மேலும்...

ஒரிஜினலை காட்டுங்கள் – ரஜினி விவகாரத்தில் எச்.ராஜா கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் மூலப் பத்திரத்தை காட்டுங்கள்!” என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள்…

மேலும்...

வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….

மேலும்...

துக்ளக் விழாவில் பேசியதற்கு அவுட் லுக் தான் ஆதாரமா? – ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி!

சென்னை (21 ஜன 2020): “பெரியார் குறித்து துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினி அவுட் லுக்கை ஆதாரமாக காட்டியது ஏன்?” என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ரஜினி வீடு முற்றுகை இடப்படும் என…

மேலும்...