சசிகலாவுக்கு கொரோனா உறுதி!

பெங்களூரு (21 ஜன 2021): சிகலாவுக்கு கோரோனா உறுதிக்கியுள்ள நிலையில் அவரது உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இன்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. D

மேலும்...

சசிகலாவுக்கு கொரோனா? – மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரு (20 ஜன 2021): பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா திடீரென காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சாதாரண சுவாச கோளாறு தான் என தெரிவித்தனர். இதனை அடுத்து , பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக்கவுள்ளார் என்பது…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை (20 ஜன 2021): தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் கொள்கிறேன். ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக, ஐ எம் ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று…

மேலும்...

தமிழகம், கேரளா தடுப்பூசி போடுவதில் பின்தங்கல்-மத்திய அரசு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (19 ஜன 2021): தடுப்பூசி போடுவதில் கேரளா மற்றும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னுரிமை பிரிவில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் கூட இதுவரை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசியை நம்புமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில் மத்திய அரசு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா தடுப்பூசி போட தயங்குகின்றன என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்துள்ளது. தடுப்பூசி…

மேலும்...

ஓய்வெடுக்கப் போகிறேன் – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு!

சென்னை (18 ஜன 2021): பிக் பாஸ் 4 நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் சில காலம் ஒய்வு மேற்கொள்ளப்போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மநீம சார்பில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய…

மேலும்...

பட்டையை கிளப்பும் ஸ்ரீகிருஷ்ணா மாட்டிறைச்சி கடை!

சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது. அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும்,…

மேலும்...

அமித் ஷா பி.ஏ க்கு போன் செய்தால் உடனே மதக்கலவரம்தான் – பாஜக ரவுடியின் அடாவடி!

சென்னை (13 ஜன 2021): சிக்கன் ரைஸுக்காக மதக் கலவரம் செய்வோம் என்று பாஜகவினர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மதத்தின் பெயரால் அடாவடி செய்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் இல்லாத நிலையில் எப்படியும் கட்சிக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ரவுடிகளை தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர். மத்தியில் பாஜக ஆள்கிறது…

மேலும்...

கொரோனா வைரசுக்கு புதுவகை மருந்து – தமிழக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு!

சென்னை (13 ஜன 2021): கொரோனா வைரஸை ஒழிக்க தினமும் ரசம் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “உங்கள் உணவில் தினமும் ரசம் மற்றும் சாம்பார் சேர்க்கவும். தினமும் குறைந்தது அரை கிளாஸ் அல்லது ஒரு கிளாஸ் ரசம் குடித்தால் . கொரோனா வைரஸ் இறந்துவிடும், அல்லது ஓடிவிடும். நான் ஒவ்வொரு நாளும் ரசம் குடிப்பேன். ”என்றார் ராஜேந்திர பாலாஜி. மேலும் தமிழக உணவுகள் கோவிட்டை எதிர்த்துப் போராட…

மேலும்...

நடிகர் ரஜினி அதிரடி ட்வீட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை (11 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைய மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஜினியை அரசியலில் நுழைய வலியுறுத்தி அவரது ரசிகர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ரஜினி விளக்கம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக, ரசிகர்கள் “வா தலைவா வா (வாருங்கள், தலைவர், வாருங்கள்)”, “இப்போது இல்லினா, நான் ஒருபோதும் இல்லை (இப்போது இல்லை என்றால், ஒருபோதும் இல்லை)” போன்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இனி யாரும்…

மேலும்...

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி – முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு!

சென்னை (11 ஜன 2021): தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய…

மேலும்...