கொல்கத்தா (11 பிப் 2021): மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மாதாவுக்கு இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வாங்க சட்டமன்றத் தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார் என்று தெரிவித்திருந்த.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் இங்கு கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் அதற்கு இங்கு இடமில்லை. என்று தெரிவித்துள்ளார்.