கொரோனா மருந்து – தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு முதலில் விநியோகிக்க முடிவு!

புதுடெல்லி (25 ஜூன் 2020): நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கும் மருந்துக்கு இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கோவிஃபோர்(Covifor) என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான Remdesivir-ஐ சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றுள்ளது. இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது. நாட்டின்…

மேலும்...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

புதுடெல்லி (25 ஜூன் 2020): சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

கொரோனா பரவல் காரணமாக குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்!

நீலகிரி (25 ஜூன் 2020): கொரோனா பரவல் காரணமாக நீலகிரியில் , 30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரியில், பொது போக்குவரத்து ஜூன், 1ம் தேதி முதல் துவங்கியது. 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் கிளைகளில், 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் மக்கள் மத்தியில் பேருந்தில் பயணிக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவான பஸ்களை…

மேலும்...

திருச்சியில் பரபரப்பு – கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை வீசி எறிந்த மருத்துவ ஊழியர்கள்!

திருச்சியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை வேனில் ஏற்றிசென்று கோட்டைமேடு காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 433 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 206 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 228 பேருக்கு தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 78 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி சமயபுரத்தை…

மேலும்...

மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்கள் செல்ல இ.பாஸ் அவசியம் – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு எம்.எல்.ஏ மரணம்!

கொல்கத்தா (24 ஜூன் 2020): கொரோனா பாதிப்பால் மேற்கு வங்க எம்.எல்.ஏ தாமோனாஷ் கோஷ் உயிரிழந்தார். 60 வயதான தாமோனாஷ் கோஷ் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா…

மேலும்...

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 விமானங்கள்: மத்திய அரசு தகவல்!

புதுடெல்லி(24 ஜூன் 2020): வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியா வர இயலாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு விமானங்களை இயக்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட…

மேலும்...

பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனா மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு மருந்துகள் ஆய்வின் அடிப்படையில் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒருபுறம் கொரோனாவுக்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது இப்படியிருக்க யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது….

மேலும்...

வந்தேபாரத் திட்டத்தில் முறைகேடு – ஏர் இந்தியா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

நியூயார்க் (23 ஜூன் 2020): வந்தேபாரத் திட்டத்தின்படி வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் ஏர்.இந்தியா விமானம் கட்டணங்கள் வசூலிப்பதை அமெரிக்க போக்குவரத்துதுறை எதிர்த்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரமுடியாமல் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தேபாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானம் மீட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.4 லட்சம் – உயிரிழப்பு 14,000 பேர்!

புதுடெல்லி (23 ஜூன் 2020): இந்தியாவில் இன்றுவரை கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,40,215 உயர்ந்துள்ளது. இதேபோல், மொத்த உயிரிழப்பு 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக பாதிப்பு கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதுவரை 2,48,190 கொரோனா நோயாளிகள் குணமைடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைபவர்களின் விகிதமானது 56.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில்…

மேலும்...