தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை (15 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாணியது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண…

மேலும்...

திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் பாய்ச்சல்!

சென்னை (14 மே 2020): திமுக எம்பிக்களின் பேச்சு தம்மை சார்ந்தவர்களை புண்படுத்தியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைத்து – அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துதிமுக சார்பில் மனுக்களை அளிக்க தலைமைச் செயலாளர் அவர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து பேசியபோது, தலைமை செயலர் வித்தியாசமாக நடந்து கொண்டதாக திமுக எம்பிக்கள் குற்றம் சட்டியுள்ளனர். அதில், “நாங்கள்…

மேலும்...

பிரதமர் நிதி குறித்து பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

புதுடெல்லி (14 மே 2020): “PM-CARES, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட தொகையானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு…

மேலும்...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கடன் பெறும் விவசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த, ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில், ரூபாய் 3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், கடன் பெறும் விவசாயிகள் முதல் 3…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த புற்று நோயாளிகள் குணமடைந்தனர்!

சென்னை (14 மே 2020): சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் புற்று நோய் பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். அதில் குறிப்பாக வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோய் தீவிர தன்மையடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய்…

மேலும்...

இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில்…

மேலும்...

தொடரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கொரோனா ஊரடங்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த…

மேலும்...

கொரோனாவுக்கு இவங்கதான் காரணமா? -ஸ்டாலின் விளாசல்!

சென்னை (14 மே 2020): கொரோனா பரவலுக்கு காரணம் கோயம்பேடு மார்கெட் ஊழியர்கள் என்று பழி போடுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன…

மேலும்...

அதிர்ச்சி தகவல் – இருமடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்!

சென்னை (14 மே 2020): ஆம்னி பேருந்து கட்டணங்கள் இரு மடங்காக உயரும் என்ற அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்ததுபோல், பொது போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால் பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள்…

மேலும்...

அரசுத் தரப்பிலிருந்து வருவது 4 லட்சம் கோடி மட்டுமே – கபில் சிபல் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 மே 2020): நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையில், அரசிடம் இருந்து வரும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அரசிடமிருந்து வரும் உண்மையான நிவாரணத் தொகை 4…

மேலும்...