பற்றி எரிந்த டெல்லியில் முஸ்லிம்களை பற்றிப் பிடித்த மொஹிந்தர் சிங்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலை சம்பவத்தில் 70 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர் இரண்டு சீக்கியர்கள். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 42 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டட்ஜி/ அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம்…

மேலும்...
shaheen-bagh

டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுக்கு இந்துத்வா அமைப்பு மீண்டும் மிரட்டல்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த இந்து சேனா இந்துத்வா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பூட்டும் பேச்சும், மூன்று நாட்கள் அவகாசத்தில் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்துவோம்…

மேலும்...

மத்திய அமைச்சரின் சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) வாசகம் இன்றும் தொடரும் அவலம்!

புதுடெல்லி (29 பிப் 2020): மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சுட்டுத் தள்ளுங்கள் என்ற சொல் இன்றும் வன்முறையாளர்களால் தொடரப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமைதி திரும்பியதாக போலீஸ்…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட சகோதரர்கள் ஹாஷிம் மற்றும் ஆமிர்!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப் படுகொலையில் கொல்லப்பட்ட அண்ணன் தம்பி இருவரின் உடல் நீண்ட ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாதத்தில் 27 வயது ஆமிரும் அவருடைய தம்பி 17 வயது ஹாஷிமும் இந்தத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது கொடூரத்தின் உச்சம்….

மேலும்...

டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் முஹம்மது அனீஸ் வீடு எரிப்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் ஜவான் அனீஸ் வீடும் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் டெல்லி வட கிழக்கு பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர் (BSF) முஹம்மது அனீஸ் வீடும் எரித்து…

மேலும்...

கொடூரர்கள் இருக்கும் கட்சியில் இனி நான் இருக்கப்போவதில்லை – பிரபல நடிகை பாஜகவிலிருந்து விலகல்!

புதுடெல்லி (29 பிப் 2020): கொடூர சிந்தனை கொண்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகையும் அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி. இவர் மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற டிவி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பல்வேறு சீரியல்கள், விளம்பரங்கள் என நடித்து வந்த சுபத்ரா 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில்தான் பா.ஜ.க-வின் போக்கு தற்போது மாறிவிட்டது எனக் காரணம் கூறி, அந்தக்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் பாதுகாத்த இந்து கோவில்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி…

மேலும்...

டெல்லி வன்முறையில் உயிரிழந்த 30 பேர் யார்? என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த 38 பேர் யார் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முபாரக் அலி (35) பெயிண்டிங் வேலை செய்பவர் இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . முஹம்மது இர்ஃபான் (42) கூலி வேலை செய்பவர். இவருக்கு…

மேலும்...

டெல்லி வன்முறை மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு(OIC) கண்டனம்!

ஜித்தா (28 பிப் 2020): டெல்லியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமை காவலரும் ஐபி ஆபிசரும் அடங்குவர். கொடூரமான இந்த வன்முறை நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன் விளைவாக வியாழன் அன்று (27-2-2020), இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த வன்முறைக்குக் கடும்…

மேலும்...

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஹிந்து சேனா!

புதுடெல்லி (27 பிப் 2020):ஹரியானாவின் குருகிராமில் ஹிந்து சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டுள்ள ஊர்வலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் டெல்லியை அடுத்து ஹரியானா…

மேலும்...