சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

லக்னோ (14 பிப் 2020): டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவர் வரும் திங்கள் கிழமை ஜாமீனில் வெளியாவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்…

மேலும்...

முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர். இந்நிலையில் உண்மையில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் நிறைவேறியது!

புதுச்சேரி (12 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி…

மேலும்...

குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயம் – உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (12 பிப் 2020): அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அசாம் இறுதி குடிமக்கள் பட்டியலின் தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில்…

மேலும்...

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (11 பிப் 2020): ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்சிஆர், சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த…

மேலும்...

என் மார்பில் சுட்டாலும் என் ஆதாரங்களை காட்ட மாட்டேன் – அசாதுத்தீன் உவைசி!

புதுடெல்லி (11 பிப் 2020): என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் குடியுரிமை ஆதாரங்களை காட்ட மாட்டேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பேசிய உவைசி, “முஸ்லிம்களிடம் இருந்த மரணம் பயம் இப்போது நீங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பாஜகவின் வெறுப்பு பேச்சு. நான் பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக முஸ்லிம்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு மரண பயம்…

மேலும்...

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் தயாநிதி மாறன் ஆதார் இருக்கும்போது மற்ற ஆவணங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். ஆதார் எண் இருக்கும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு என்றும் க்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்-க்கு ஒரு நீதியா? என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம். ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லி ஷஹீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை…

மேலும்...