தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…

மேலும்...

சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!

சென்னை (20 ஆக 2020): சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ரஹ்மான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஹ்மான்கான் திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான்கான் மறைவையொட்டி திமுக…

மேலும்...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (19 ஆக 2020): கொரோனா முழுவதும் இல்லாமல் போன பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு…

மேலும்...

அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு!

புதுடெல்லி (19 ஆக 2020): கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலலியில், அடுத்த மாதம் முதல், நாடெங்கும் திரையரங்குகள் திறக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கடுமையான தனி மனித இடைவெளி (Social Distancing) மற்றும் சுத்திகரிப்பு விதிகளோடு, மற்ற கட்டிடங்களைச் சாராமல் தனியாக இருக்கும்…

மேலும்...

பி.எம்.கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களின் பங்கு? – ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஆக 2020): கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூறியிருப்பதாவது: “பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும். ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின்…

மேலும்...

கொரோனாவின் விளைவு – இப்போது இவற்றை கழுவும் திரவமும் மார்கெட்டில் வந்துவிட்டது!

ஐதராபாத் (18 ஆக 2020): கொரோனா வந்தது மனித வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. மனிதன் குளிக்கிறானோ இல்லையோ, சானிட்டைஸர் உபயோகம் அத்தியாவசியமாகிவிட்டது. எங்கு போனாலும், கை கழுவு, சானிட்டைஸர் உபயோகம் செய் என்பதாகவே அறிவிப்புகள் இருந்தபடி உள்ளன. இந்நிலையில் காய்கறி, மற்றும் பழங்களை சாதாரண தண்ணீரில்தான் கழுவிக் கொண்டு இருந்தோம், ஆனால அதிலும் பாக்டீரியாக்கள், வைரஸ் போன்றவை 100 சதவீதம் வெளியாவதில்லையாம். அதனால் இப்போது இவற்றை சுத்தம் செய்யும், திரவமும் மார்கெட்டில் அறிமுகமாகிவிட்டது. இவற்றிற்கான…

மேலும்...

டாஸ்மாக்குக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு – ஸ்டாலின் கருத்து!

சென்னை (17 ஆக 2020): தமிழகத்தில் கொரோனா பரவலில் பெறும்பங்கு டாஸ்மாக்குக்கு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும்…

மேலும்...

இறப்பு விகிதத்தைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (17 ஆக 2020): இறப்பு எண்ணிக்கையப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர்…

மேலும்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீக்கிரமா எழுந்து வா, பாலு! #SPB pic.twitter.com/XQKmptJTlC — மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) August 14, 2020 அதில், “சீக்கிரம் வா பாலு, நீ விரைவில் வீடு திரும்புவாய் என எதிர்…

மேலும்...

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.

மேலும்...