தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

Share this News:

சென்னை (28 ஜன 2020): பொதுவெளியில் அமைச்சர்கள் கண்டபடி கருத்துக்களை முன் வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல் , ரஜினி என்ன அப்படி பேசிவிட்டார் என்றும், சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். அதேவேளை பல அமைச்சர்கள் ரஜினியின் பேச்சை கண்டித்திருந்தனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கீரின்வேஸ் சாலை இல்லத்தில் அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தேவையில்லாத கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாமென அமைச்சர்களிடம் முதல்வர் பழனிசாமி கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *