சென்னை (15 ஜன 2020): ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார்.
முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்
ரஜினியின் இந்த பேச்சு திமுககாரர்களை ரொம்பவே உசுப்பிவிட்டது. துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றால் முரசொலி வைத்திருப்பவன் முட்டாளா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். ரஜினியின் இந்த பேச்சு திமுகவினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது கூறியதாவது: ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
— Udhay (@Udhaystalin) January 14, 2020