வாட்ஸ்ஆப் அப்டேட்டிங் திட்டத்தில் திடீர் மாற்றம்!

Share this News:

நியூயார்க்(16 ஜன 2021): வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டிங் கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்துள்ளது.

கடந்த மாதம் வாட்ஸ்ஆப் அப்டேட்டிங்கில் தனி மனித சுதந்திர தலையீடு இருக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டது. இதனை அடுத்து அப்டேட்டிங் புதுப்பிப்பைத் தற்போதைக்குச் செயல்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது.

மேலும், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களுக்கு மக்கள் பெருமளவில் மாறுவது வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் வாட்ஸ்ஆப் மீதான தவறான எண்ணங்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தனியுரிமைக் கொள்கை குறித்த குழப்பத்தால் மக்களிடையே பரவிய தவறான தகவல் வாட்ஸ்ஆப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள் எதுவும் ஃபேஸ்புக்கில் பகிரப்படவில்லை என்றும் தனிப்பட்ட செய்திகள் எப்போதும் தனிப்பட்டதாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் தரவைப் பகிரும் முறை புதியதல்ல என்றும் அதை விரிவாக்கத் திட்டமிடவில்லை என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *