இந்நேரம்

அதிராம்பட்டினம் அருகே உள்ள பிரைம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!

பட்டுக்கோட்டை (02 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரைம் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் 2 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா கடந்த 26 பிப்ரவரி மாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திரு மோகன சுந்தரம் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசி பார்வையாளர்களை கலகலப்பூட்டினார். மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற…

மேலும்...

தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

சென்னை (01 மார்ச் 2023): தமிழகமெங்கும் திமுகவினர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர். தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும்…

மேலும்...

தமிழ்நாட்டின் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? – திருமாவளவன் கேள்வி!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. தி.மு.க….

மேலும்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (01 மார்ச் 2023): தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 1) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி…

மேலும்...

அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…

மேலும்...

சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...

தொடர்ந்து சரிவை சந்திக்கும் அதானி குழுமம் – கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி!

புதுடெல்லி (23 பிப் 2023): பங்குச்சந்தையில் கௌதம் அதானியின் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில், செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கௌதம் அதானியின் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை செபி கண்காணித்து வருகிறது. சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து ஓரியண்ட் சிமெண்ட்ஸ் விலகியுள்ளது. சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 7.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. நேற்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ்…

மேலும்...

காலம் மாறும்போது காட்சியும் மாறுகிறது – காயத்ரி ரகுராம் திருமா சந்திப்பின் பின்னணி!

சென்னை (22 பிப் 2023): நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்ததை அடுத்து, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6…

மேலும்...

வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து சிறுபான்மையினர் பெயர்கள் நீக்கம்!

பெங்களூரு (22 பிப் 2023): கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுபான்மை வாக்காளர்களை நீக்குவது எதிர் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க ஒரு உத்தி என்று சிறுபான்மை தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து, பெங்களூரு பேராயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம், பிப்ரவரி, 15ல் மனு அளித்தனர். அதில் பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி வாக்காளர்…

மேலும்...

இணையத்தில் பரவிய அந்தரங்க படங்கள் – விஸ்வரூபம் எடுக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சண்டை!

பெங்களூரு (20 பிப் 2023): கர்நாடகாவில் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் அரசுக்க்க் தலைவலியாக மாறியுள்ளது. டி.ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் இடையேயான தகராறு, அந்தரங்க புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் பரவும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. மைசூரில் எம்எல்ஏ சாரா மகேஷுடன் ரோகினி சிந்துரி இருக்கும் படத்தை டி ரூபா வெளியிட்டதை அடுத்து இருவருக்கும் பிரச்சனை சூடு பிடித்தது. மைசூர் துணை கமிஷனராக இருந்தபோது கால்வாயை ஆக்கிரமித்து எம்எல்ஏ மாநாட்டு…

மேலும்...