லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (05 பிப் 2020): லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் இல்லை அதைபோல் துக்டே துக்டே கேங்க் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. ‘துக்டே துக்டே கேங்க்’ என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல்…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவனா? – பகீர் தகவல்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவன் என்ற டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி கபில் குஜ்ஜார் என்பவன் கைது செய்யப்பட்டான். அபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியவாறு போராட்டக் காரர்களை பார்த்து அவன் துப்பாக்கிச்…

மேலும்...

NRC-யை அமல்படுத்தும் எண்ணம் இல்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்!

புதுடெல்லி (04 பிப் 2020): நாடு முழுவதும் என்.ஆர்.சியை இப்போதைக்கு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதுல் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிக்கு தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் மக்களிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் மீது வழக்கு!

லக்னோ (04 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் அஜிஸ் குரோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங். மூத்த தலைவரும், உ.பி. உத்தர்காண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவருமான அஜிஸ் குரேஷி உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக மெழுகு வர்த்தி ஏந்தி…

மேலும்...

மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்பிக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி (04 பிப் 2020): மஹாத்மா காந்தி பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய, பா.ஜ., – எம்.பி., அனந்த குமார் ஹெக்டேவுக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது…

மேலும்...

தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும். நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு – ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை திசை திருப்பும் பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக்…

மேலும்...

கொரோனா பாதித்த மாநில பேரிடராக கேரளா அறிவிப்பு!

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் தாக்குதலை மாநில பேரிடராக மாநில கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உருவானது. அந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, 27 நாடுகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, 361 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

ரூ 15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக மோடி அமித்ஷா மீது வழக்கு பதிவு!

ராஞ்சி (03 பிப் 2020): ரூ 15 லட்சம் தராமல் பொது மக்களை ஏமாற்றியதாக பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மோடி மற்றும் மத்திய அமைச்சர்…

மேலும்...