கோவிட் நடைமுறை சில தளர்வுகளை அடுத்து இந்தியாவிலிருந்து சவூதிக்கு இந்தியர்கள் வருகை!

ஜித்தா (30 ஆக 2021): சவுதியில் இரண்டு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தல் இன்றி சவூதி திரும்பலாம் என்ற உத்தரவை அடுத்து இந்தியர்கள் சவூதி அரேபியா வர தொடங்கியுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 395 பயணிகளுடன் ஜித்தா வந்த சவூதி அரேபின் ஏர்லைன்ஸ் சார்ட்டட் விமானத்தில், வந்த பயணிகள் ஏஜெண்டுகள் அரை லட்சத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறினர். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதிக்கவில்லை என்கிற போதிலும், புதிய…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் நாடு திரும்பினர்!

ரியாத் (29 ஆக 2021): சவுதி அரேபியாவின் அல்-ஹஸாவில் மூன்று வருடங்கள் ஊதியமின்றி சிக்கித் தவித்த தமிழர்கள் இருவர் நாடு திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜெயசேகரன் பிரான்சிஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்தனார் வேலைக்காக சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு சென்றனர். முதல் ஆண்டு சம்பளம் சரியாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. சம்பளம் வழங்கப்படாததற்காக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் வேறொரு போலியான வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஒரு சமூக…

மேலும்...

கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

துபாய் (28 ஆக 2021): துபாயில் கப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றிய நான்கு பேருக்கு தலா 10 லட்சம் வீதம் 40 லட்ச ரூபாய் துபாய் ஆட்சியாளர் மூலம் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் துபாய் தேரா அல் மாரார் பகுதியில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் கர்ப்பிணிப் பூனை ஒன்று சிக்கித் தவித்தது. எப்படியாவது உயிர் தப்ப போராடிய அந்த பூணையை…

மேலும்...

சினோஃபாம் மற்றும் சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு சவூதி அரேபியா அனுமதி

ரியாத் (25 ஆக 2021): சவூதி அரேபியா மேலும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் பாயன்டெக், ஜான்சன் & ஜான்சன் மற்றும் மோடெனா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும், சீன தடுப்பூசிகளான சினோஃபாம் மற்றும் சினோவாக்கிற்கு சவுதி சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை ஆறாகக் கொண்டுவருகிறது. அதேவேளை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஜான்சன்…

மேலும்...

சவூதியிலிருந்து விடுமுறையில் இந்தியா சென்றவர்களுக்கு நற்செய்தி!

ரியாத் (24 ஆக 2021): சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள், மூன்றாம் நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்தனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்திய குடிமக்கள் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது…

மேலும்...

ஒருவர் ஒரு காருக்கு மேல் வாங்கத் தடை!

குவைத் (23 ஆக 2021): குவைத்தில் வெளிநாட்டினர் ஒரு காருக்கு மேல் வாங்க தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவர் பல வாகனங்களை வாங்குவதை கட்டுப்படுத்தும் ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்துத் துறையால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது. வணிக உரிமம் இல்லாமல் வாகனங்களை வாங்குவது, விற்பது, வாடகைக்கு விடுவது அல்லது குத்தகைக்கு விடுவதை கட்டுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கபப்டுள்ளது….

மேலும்...

கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாயாக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (22 ஆக 2021): கோவிட் கட்டுப்பாடுகளை மீறி குடும்ப கூட்டங்கள் நடத்தினால் 10 ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சவூதி அரேபியாவில் கோவிட் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அது மேலும் பரவாமல் தடுக்க சவூதி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அதன்படி அதிகப்படியாக கூடும் கூட்டங்களால்தான் கோவிட் பவரால் அதிகரிக்கிறது என்பதால் கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதியில் குடும்ப நிகழ்வுகளுக்கு…

மேலும்...

சவூதியில் சமூக வலைதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் ஹரீஷ் விடுதலை!

தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான ஹரீஷை விடுதலை செய்ய…

மேலும்...

மக்கா ஹரம் பள்ளிக்குள் செல்ல 12 வயதுக்கு மேல்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி!

மக்கா (19 ஆக 2021): மக்காவில் உள்ள ஹராம் மசூதிக்குச் செல்ல குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைத்த பிறகு, பல குழந்தைகள் ஹராம் மசூதிக்கு சென்று உம்ரா செய்து பிரார்த்தனை செய்தனர். கோவிட் பரவலை அடுத்து, ஹராம் மசூதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமலிருந்தனர். இதனை அடுத்து படிப்படியாக கோவிட் பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக குறைந்த அளவில் குழந்தைகள் அல்லாத உள் நாட்டு உம்ரா யாத்திரீகர்கள் மட்டும் மக்காவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி திட்டம் தொடங்கிய பிறகு அது…

மேலும்...