உச்சத்தை தொடும் கொரோனா – தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் பலி!

சென்னை (29 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்‍கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்‍களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்‍கு நேற்று, ஒரே நாளில் 827 பேருக்‍கு…

மேலும்...

கொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (28 மே 2020): கொரோனா நோயை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு : “கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை….

மேலும்...

தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

சென்னை (28 மே 2020): கொரோனாவை எதிர்த்துப் போராடும் எங்கள் உழைப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்று 12246 பேருக்கு இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 4,55,356 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் தமிழகம் சிறப்பாக…

மேலும்...

கொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி!

புதுவை (28 மே 2020): கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரி செய்ய கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. புதுவை மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கொரோனா வரியை விதித்துள்ளது. புதுவையில் பெட்ரோல் மீதான வரி 5.75 சதவீதமாகவும் டீசல் வரி 3.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியுள்ளது.

மேலும்...

செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன்? – சீமான் அதிரடி கேள்வி!

சென்னை (28 மே 2020): எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் கொரோனா பயமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே…

மேலும்...

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? யுவனின் மனைவி அதிரடி பதில்!

சென்னை (28 மே 2020): “யுவனை முஸ்லிமாக மாற்றி வீட்டீர்களே?” என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்ட கேள்விக்கு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா அதிரடியாக பதில் அளித்துள்ளார். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்திற்கு மாறினார். அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து ஷப்ரூன் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷப்ருன் நிஷா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்….

மேலும்...

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை!

சென்னை (28 மே 2020): அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தொகுதிகளில் அதிக துடிப்புடன் உள்ளவர்களை கவனத்தில் கொண்டே பதவிகள் வழங்கப்படும்…

மேலும்...

தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர்…

மேலும்...

சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்!

சென்னை (28 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து…

மேலும்...

நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாகப்பட்டினம் (27 மே 2020): நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னையை மிக அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்களில் பலர் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர். அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில்,…

மேலும்...