சீமான் மீது தேச துரோக வழக்கு – கோவையில் அப்படி என்ன பேசினார்?

கோவை (09 மே 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த “ஷாகின்பாக்” போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக பேசியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் 72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆண்டு இருக்கின்றன எனவும் இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்திருக்கின்றனர் என…

மேலும்...

இது சாதாரண வெற்றியல்ல – கமல்ஹாசன் பெருமிதம்!

சென்னை (09 மே 2020): டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சாதாரண வெற்றியல்ல . தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின்…

மேலும்...

டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி…

மேலும்...

சென்னையில் முக்கிய நபர்களை தாக்கும் கொரோனா – தொடர் அதிர்ச்சி!

சென்னை (08 மே 2020): சென்னையில் முதன்மை பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

டாஸ்மாக் கொடுமை – முதல்வர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு,…

மேலும்...

குடிகாரர்களின் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு திண்டாட்டம்!

சென்னை (07 மே 2020): என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்தபடியே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே விபத்துக்களும் நடக்க தொடங்கியுள்ளன. பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது. ஆனால் எங்கும் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 316 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் பாதிக்‍கப் பட்டவர்களின் மொத்த…

மேலும்...

பேருந்துகள் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்!

சென்னை (07 மே 2020): ஊரடங்கு முடிவடைந்த பின்னர், 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மே 17-க்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படும் போது, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும், பேருந்தை இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்ப, இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும் என்றும், பேருந்தில் நின்று கொண்டே…

மேலும்...

திமுக கூட்டணி கட்சிகள் செய்யவுள்ள காரியம் தெரியுமா?

சென்னை (07 மே 2020): மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பொதுமக்கள்,இன்று, 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’ என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை…

மேலும்...

சென்னையில் முதல்வர் எடப்பாடி வீட்டு பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா பாதித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை…

மேலும்...