ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது குழந்தைகளுக்கு காத்திருக்கும் கொடுமைகள்!

சென்னை (30 ஜன 2020): ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் தேர்வு எழுத முடியுமாம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்டதிலிருந்தே மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

திருச்சி (30 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கின் திடீர் திருப்பமாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல்…

மேலும்...

வட்டி வியாபாரம் பார்த்த ரஜினி – பற்றி எரியும் தகவல்!

சென்னை (30 ஜன 2020): ரஜினி மீதான வருமான வரி மோசடி வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் அவர வட்டிக்கு கடன் கொடுத்தாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் ரஜினி அளித்த விளக்கத்தில் கோபாலகிருஷ்ண…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – மாணவர்களை நோக்கி சுட்ட பயங்கரவாதி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதி மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்காண பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜாமியா மில்லியாவில் இருந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்திருக்கும் ராஜ்காட்டிற்கு பேரணியாக செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ராஜ்காட்டிற்கு அமைதியான முறையில் பேரணி…

மேலும்...

திருமண விழாவில் பிறந்தநாள் – அசரடித்த அழகிரி!

மதுரை (30 ஜன 2020): முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள். மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு…

மேலும்...

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்...

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார்….

மேலும்...

தமிழுக்காக போராடுபவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் – எச்.ராஜா ட்விட்!

தஞ்சை (30 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

மேலும்...

சிஏஏ விவகாரம்: முஸ்லிம் பெண்ணின் வங்கி கணக்கு புத்தகத்தில் தில்லு முல்லு செய்த வங்கி!

ஈரோடு (30 ஜன 2020): ஈரோட்டில் முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. ஈரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது. இதை அறிந்து டாக்டர் சலீம்…

மேலும்...

சிஏஏ போராட்டம் – பெண்களை குறி வைக்கும் அரசு!

காஞ்சிபுரம் (29 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலப் போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது சுவரில் ஓவியம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு…

மேலும்...