கொரோனா பாதிகப்பட்டால் உதவ தயார் நிலையில் இலவச ஆம்புலன்ஸ் – VIDEO

கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

மேலும்...

ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து…

மேலும்...

கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி!

தெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் மீது,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக தகவல் தரப்படவில்லை…

மேலும்...

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – தனிமைப் படுத்தப்பட்ட 2984 பேர்!

சென்னை (18 மார்ச் 2020): தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸுக்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவர் கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் ரூபாய் 500 க்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மபூத் அலி என்ற பால் வியாபாரி, மாட்டு முத்திரம் விறபனை செய்வதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேஜை வைத்து மாட்டு மூத்திரம் விற்பனை செய்வதை போலீசார் அறிந்தனர். உடனே மபூத் அலியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, டெல்லியில் இந்து மகா சபா மாட்டு…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்வு!

தெஹ்ரான் (18 மார்ச் 2020): சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்...

இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): இந்திய ராணுவத்திலும் கொரோனா வைரஸ் நோய் நுழைந்துவிட்டது. கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்த சிப்பாயின் தந்தை ஈரான் சென்று திரும்பியதாகவும், அவரின் தந்தை வழியே இவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செவ்வாயன்று இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது, வைரஸ் தொற்றுநோயின் 3-வது கட்டத்தில் இல்லை என்று வலியுறுத்தியது. நிலைமையைச் சமாளிக்க ICMR சோதனைக்கு…

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை எடுக்கும் முன்மாதிரி கிராமம்!

தஞ்சாவூர் (18 மார்ச் 2020): அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செந்தலை பட்டினம் கிராமத்து மக்கள், தங்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று திரும்பி வரும் கிராம மக்கள்…

மேலும்...

கொரோனாவுக்காக மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): கொரோனா வராது எனக்கூறி, சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு கொல்கத்தா பாஜக நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர், மாட்டு மூத்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கொரோனா வராது என்று கூறி அனைவருக்கும் மாட்டு சிறுநீர் கொடுத்துள்ளார். மேலும் சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் மாட்டு மூத்திரம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்வு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுக் கூட்டங்களுக்கும் தடை…

மேலும்...