கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பெண் மருத்துவர் இங்கிலாந்தில் மரணம்!

லண்டன் (13 மே 2020): கொரோனா பாதிப்பால் இந்திய மருத்துவர் இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 55 வயதான டாக்டர் பூர்ணிமா நாயர் கேரளாவில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஸ்டேஷன் வியூ மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உயிருக்கு போராடி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மேலும்...

எளியவர்களிடம் மட்டுமே அதிகார வர்க்கம் அத்துமீறும் – கனிமொழி ஆவேசம் (வீடியோ)

சென்னை (13 மே 2020): வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநிலையில் நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல திமுக எம்.பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ?…

மேலும்...

கோவிட் -19 இல் மோடி செய்த தவறை எவ்வாறு சரிசெய்ய முடியும்?: ராமச்சந்திர குஹா

கொரோனா விசயத்தில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.? அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா வெளியிட்டுள்ள முழு கட்டுரையின் தமிழாக்கம். COVID-19 ஐ அடுத்து, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜூம் வழியாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய தொலைதூரக் கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயதானவர்களுக்கும் இது பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, இந்த…

மேலும்...

கோபமடைந்த ட்ரம்ப் காரணம் இதுதான்!

வாஷிங்டன் (13 மே 2020): செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், வெய்ஜியா ஜியாங் (Weijia Jiang) என்னும் செய்தியாளர், அமெரிக்காவில் அன்றாடம் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும்போது உலகிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் இங்கு தான் நடைபெறுகின்றன என்று பரிசோதனையில் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எல்லா நாடுகளிலும்…

மேலும்...

துபாயில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு!

துபாய் (12 மே 2020): துபாயில் மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஹோட்டல், கடற்கரை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் சில விதிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வெளிப்புற இடங்களிலும் 5 அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நீச்சல்,…

மேலும்...

ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி:…

மேலும்...

மதுக்கடைகளுக்கு திறப்பு விழா, மத வழிபாட்டுத் தலங்களுக்கு மூடு விழாவா? – நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை (12 மே 2020): தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும்? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட…

மேலும்...

ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் – நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா!

புதுடெல்லி (12 மே 2020): ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள்…

மேலும்...

வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் பிரபல நடிகர்!

திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் பிரபல டிவி சேனலான கைரேலி, இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வளைகுடாவில் வேலையின்றி, பணமின்றி சிக்கித் தவிக்கும் கேரள ஏழை மக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கைரேலி சேனல் முன் வந்துள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டி தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது….

மேலும்...

மனமோகன் சிங் உடல் நிலை அப்டேட்!

புதுடெல்லி (11 மே 2020): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், டாக்டர் நிதீஷ் நாயர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், கொரோனா நோய்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை…

மேலும்...