சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது. பிரசவ காலத்தில் அந்த பெண் சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஐந்தாவது மாதத்திலேயே மருத்துவ கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயும் கருவில் உள்ள குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். தற்போது அந்த பெண்ணும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக ரியாத் இரண்டாவது ஹெல்த் கிளஸ்டர் தெரிவித்துள்ளது….

மேலும்...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி அரேபியாவில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சவூதி குடிமக்களைப் பணியமர்த்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நிதாகத் (Nitaqat) என்பது சிவப்பு, வெளிர் பச்சை, நடுத்தர பச்சை, அடர் பச்சை மற்றும் பிளாட்டினம் போன்ற வெவ்வேறு வண்ணங்களில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப…

மேலும்...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும். குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும். மக்காவில்,…

மேலும்...

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மக்கா கவர்னரேட் ட்வீட் செய்துள்ளது. மக்கா மாகாணத்தில் அல் குன்ஃபுடா, அல் லைத், அல் அர்டியாத் மற்றும் தாயிப் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல் மஜ்மா, அல் ஜுல்பி, அல்…

மேலும்...

சவூதி அரேபியா மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத…

மேலும்...

சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது. நகராட்சி…

மேலும்...

சவூதியில் காலாவதியான ரீ-என்ட்ரி விசா நுழைவுத் தடை குடும்ப விசாவுக்கு பொருந்துமா?

ரியாத் (17 ஜன 2023): சவூதியில் குடும்ப விசா அல்லது சார்பு விசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் மறு நுழைவு விசாவில் (ரீ-என்ட்ரி) நாட்டை விட்டு வெளியேறிய பிறகு திரும்பவில்லை என்றால், நுழைவுத் தடை பொருந்தாது என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் விசா காலத்திற்குப் பிறகு, சார்பு விசாவில் உள்ளவர்கள் பெற்றோரின் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஸ்போர்ட் இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது. சவூதி அரேபியாவில் வசிப்பிட அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் ரீ-என்ட்ரி விசா காலாவதியான…

மேலும்...

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம்…

மேலும்...