டெல்லியில் குவியும் நோயாளிகள் – திணறும் மருத்துவமனைகள்!

புதுடெல்லி (18 மார்ச் 2020): டெல்லியில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 139 ஐ தொட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா அறிகுறிகளுன் பொது மக்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் வரும் நோயாளிகளில் கேட்கப்படும் கேள்விகள்…

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...

கொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை!

தெஹ்ரான் (17 மார்ச் 2020): சீனா இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. அந்த வகையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 11,178 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...

கத்தாரில் அனைத்து மசூதிகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டன!

தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன. தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF  சற்றுமுன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம்…

மேலும்...

குடிமகன்களுக்கு சோக செய்தி – டாஸ்மாக் அனைத்தும் மூடல்!

சென்னை (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கவ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழகத்தில் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை!

சென்னை (17 மார்ச் 2020): தமிழக விமான நிலையங்களில் நேற்று வரை மொத்தம் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கிவரும் கொரோனா, இந்தியாவிலும் இரண்டு உயிர்களை கொன்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலை…

மேலும்...