பாகிஸ்தானுடன் சவுதி பரஸ்பர அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, ​​சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்) சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

இன்று ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது சவூதி அரேபியா.  உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக உம்ரா விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஹஜ் 2025 பருவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2025 ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.  மகிழ்ச்சியான இச் செய்தியை வளைகுடா நாடுகள் உட்பட உலகமெங்கிலும்…

மேலும்...
ஹைடெக் ஸ்டேடியம்

அதிசய வைக்கும் சவூதியின் ஹைடெக் ஸ்டேடியம்!

ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு. இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக்…

மேலும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில் வருபவர்களை புதுப்பிக்க முடியாது. காலக்கெடுவுக்குப் பிறகு அவர்கள் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் நூறு ரியால்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வருட மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசாவில் விண்ணப்பிப்பவர்கள் சவுதி அரேபியாவில் அதிகபட்சம் 90…

மேலும்...

சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில்…

மேலும்...

72 நாடுகளுக்கு சவூதி பேரீச்சம்பழம் இலவச விநியோகம் தொடங்கியது!

ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 140 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைகின்றனர். பேரிச்சம்பழம் பரிசளிக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் உள்ள 72 நாடுகளுக்கு இம்முறை பேரிச்சம்பழம்…

மேலும்...

சவூதி விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுநர்கள் நியமனம்!

ரியாத் (09 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுனர்களை நியமிக்கவும், பெண்களுக்காக சிறப்பு பாதை அமைக்கவும் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனா விமான நிலையங்களில் பெண் ஓட்டுனர்களின் சேவை புரிவர். இரண்டாவது கட்டத்தில், இந்தத் திட்டம் சவூதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக விமான நிலைய டாக்ஸி நிறுவனங்களுடன் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது…

மேலும்...

புனித ரமலான் உம்ரா குறித்து சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவிப்பு!

ஜித்தா (06 மார்ச் 2023): புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு இதற்கென உள்ள அப்ளிகேஷனில்அனுமதி பெற்ற பின்னரே உம்ரா செய்ய முடியும் என சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதி உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட NUSK செயலி மூலமாகவோ அல்லது தவகல்னா செயலி மூலமாகவோ உம்ரா அனுமதி பெறலாம். கோவிட் நோயால்…

மேலும்...

சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள்…

மேலும்...