இந்நேரம்

இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய கல்யாணராமனுக்கு சிறைத்தண்டனை – ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

சென்னை (09 மார்ச் 2023): இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர். பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாசிமக பக்தர்களுக்கு அன்னதானம்!

கும்பகோணம் (06 மார்ச் 2023): கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இன்று 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாசிமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்களுக்கு, கிஸ்வா அமைப்பு சார்பில் எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள்…

மேலும்...

தமிழ்நாடு பாஜகவிலிருந்து அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!

சென்னை (06 மார்ச் 2023): தமிழ்நாடு பாஜகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இந்த நிலையில் நேற்று திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். விலகல் குறித்த அவரது அறிவிப்பில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

மேலும்...

புனித ரமலான் உம்ரா குறித்து சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவிப்பு!

ஜித்தா (06 மார்ச் 2023): புனித ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்கு இதற்கென உள்ள அப்ளிகேஷனில்அனுமதி பெற்ற பின்னரே உம்ரா செய்ய முடியும் என சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும் என சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதி உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட NUSK செயலி மூலமாகவோ அல்லது தவகல்னா செயலி மூலமாகவோ உம்ரா அனுமதி பெறலாம். கோவிட் நோயால்…

மேலும்...

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் நூலிழையில் உயிர் தப்பினார்!

சென்னை (06 மார்ச் 2023): ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். தந்தையின் இசையிலும் யுவன் இசையிலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக…

மேலும்...

அந்தமானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

போர்ட்பிளேர் (06 மார்ச் 2023): அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஒரு வதந்தி பரவிய நிலையில் அடுத்த வதந்தி – பாஜக பிரமுகரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைவு!

சென்னை (05 மார்ச் 2023): தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ்வை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர்…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா!

அதிராம்பட்டினம் (03 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திமுக பொருளாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதற்கான அலுவலகம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று (03 மார்ச் 2023) வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் திமுக கொடியினையும் ஏற்றி வைத்தார். இதில் அதிராம்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார திமுக பிரமுகர்கள்,…

மேலும்...

சவுதி அரேபியாவில் வங்கி மோசடி கும்பல் கைது!

ரியாத் (03 மார்ச் 2023): : சவுதி அரேபியாவில், வங்கி மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களை கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். வங்கி அதிகாரிகள் போல் நடித்து பலரை இவர்கள்…

மேலும்...

அடுத்த பிரதம வேட்பாளராகும் முதல்வர் ஸ்டாலின் – தேசிய அரசியலில் பரபரப்பு!

சென்னை (02 மார்ச் 2023): இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஸடாலினை வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சியின்…

மேலும்...