இந்நேரம்

நாடாளுமன்றத்தை அதிர வைத்த மஹுவா மொய்த்ராவின் உரை – பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு!

புதுடெல்லி (11 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரையை பிரபல பாலிவுட் நடிகை மீரா சோப்ரா பாராட்டியுள்ளார். அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் மஹுவா மொய்த்ராவின் பேச்சு தேசிய கவனத்தை ஈர்த்தது. மஹுவாவின் பேச்சு, “நான் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுகிறேன். துரதிஷ்டவசமாக அது மாண்புமிகு பிரதமர் அல்ல. A இல் ஆரம்பித்து I இல் முடிபவர் ஒருவர். அது அத்வானி அல்ல. அவரது…

மேலும்...

நான் உங்கள் குடும்ப உறுப்பினர் – போரா முஸ்லிம்களிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மும்பை (10 பிப் 2023): ஷியா முஸ்லிம்களின் தாவூதி போரா பிரிவினரின் புதிய அகாடமியை பிரதமர் திறந்து வைத்து அவர்களை பாராட்டினார். அப்போது உரையாற்றிய மோடி, நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக வந்தேன் என்று கூறினார். மும்பை மரோலில் அல் ஜாமியத்துஸ் சைஃபி (சைஃபி அகாடமி)யை மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி “நீங்கள் என்னை மரியாதைக்குரிய பிரதமர் என்று அழைக்கிறீர்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். நான் இங்கு…

மேலும்...

பசுவை கட்டிபிடித்தல் – விலங்குகள் நல வாரியம் திடீர் பல்டி!

புதுடெல்லி (10 பிப் 2023): காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடும் அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம், கடந்த 6-ம் தேதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும்…

மேலும்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில்…

மேலும்...

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாஜக கூட்டத்தில் சாமியார் அழைப்பு!

புதுடெல்லி (08 பிப் 2023): முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய வேண்டும் என்று இந்துக்களுக்கு சாமியார் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை இந்துத்துவா அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சாமியாரின் கொலை வெறி உரை இணையங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் ஹரியானா தலைவரும் கர்னிசேனா தலைவருமான சூரஜ் பால் அமுவும் சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவான்கேக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்த சாமியார் இவ்வாறான வெறுப்புப் பேச்சினை…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!

சென்னை (06 பிப் 2023): முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்காக விமர்சனங்களைச் சந்தித்த பாஜக முன்னாள் நிர்வாகி லட்சுமணச்சந்திரா விக்டோரியா கவுரி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த விக்டோரியா கவுரி. கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரை எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். மேலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில் கொலிஜியம் பரிந்துரைக்கு…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஜம் ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிப்பு!

ஜித்தா (06 பிப் 2023): சவுதி அரேபியாவில் ஜம்ஜம் தண்ணீர் ஆய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஜம்ஜம் விநியோக மையங்களில் இருந்து தினமும் 150 மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படும். மக்கா மதீனா மசூதிக்கு வரும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ள சூழலில் இந்த சோதனை அதிகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு உம்ரா, ஹஜ் யாத்திரையின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாகும். மிக உயர்ந்த சர்வதேச தரத்திலான சிறப்பு ஆய்வகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரப்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறாக பேசிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு!

பார்மர் (06 பிப் 2023): : ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் மத வெறுப்பு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பதஞ்சலி நிறுவன உரிமையாளரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 அன்று துறவிகள் கூட்டத்தில் பாபா ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் திரும்புவதாகவும், இந்துப் பெண்களைக் கடத்துவதாகவும் ராம்தேவ் பேசியுள்ளார். மேலும் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்…

மேலும்...