அதிர்ச்சி சம்பவம் – கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் தற்கொலை!

அகமதாபாத் (26 மே 2020): கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் என்ற பகுதி குடியிருப்பில் வசித்து வந்த 28 வயதான நர்ஸ் சிவில் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் நர்சின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய மகள்…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

இந்தியாவிற்கு இப்படி இன்னும் ஒரு ஆபத்தா?

புதுடெல்லி (26 மே 2020): இந்தியாவிற்குள் திடீரென நுழைந்துள்ள வெட்டுக்கிளிகளால் இன்னொரு ஆபத்து வந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன. இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய…

மேலும்...

சாலையோர ஏழை முஸ்லிம் வியாபாரிக்கு கருணை கொடையாளர்களால் அடித்த ஜாக்பாட்! – வீடியோ!

புதுடெல்லி (25 மே 2020) வியாபாரத்திற்காக வைத்திருந்த மாம்பழங்களை திருடர்களிடம் இழந்து தவித்த சாலையோர வியாபாரிக்கு 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கு அதிகமான தொகை கருணை கொடையாளர்களால் கிடைத்துள்ளது. வட டெல்லியின் ஜகத்புரி பகுதியில் வண்டியில் மாம்பழம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை முஸ்லிம் வியாபாரி சோட்டா. ரம்ஜான் பெருநாளைக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது 30,000 மதிப்புள்ள மாம்பழங்கள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் இவர், வியாபாரத்திற்காக…

மேலும்...

இந்து அமைப்பினரால் கோவில் அருகே இருந்த தேவாலயம் செட் இடித்து தகர்ப்பு!

எர்ணாகுளம் (25 மே 2020): சினிமா படபிடிப்பிற்காக கோவில் அருகே போடப்பட்டிருந்த சர்ச் செட் இடிக்கப்பட்டது. பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் தேவாலயம்…

மேலும்...

CBSE பள்ளிகளில் ஆன்லைன் பயிற்சி – பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!

புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது. பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில்…

மேலும்...

கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக…

மேலும்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச்…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!

புதுடெல்லி (25 மே 2020): கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக…

மேலும்...

திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ்…

மேலும்...