வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும். மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை!

ஐதராபாத் (20 ஜன 2020): 13 வயது வளார்ப்பு மகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 48 வயது ரமேஷ் என்பவர் அவர் தத்தெடுத்த 13 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி கூறியதை அடுத்து தாய் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த…

மேலும்...

நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிப்பு?

புதுடெல்லி (20 ஜன 2020): மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடலாம். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை…

மேலும்...

ஜே.பி.நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு!

புதுடெல்லி (20 ஜன 2020): பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். டில்லியில், பாஜக, தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜன.,20) நடந்தது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார். நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான…

மேலும்...

ஒரு கோடி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவார்கள் – பாஜக தலைவர் பேச்சு!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்…

மேலும்...

மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

புதுடெல்லி (20 ஜன 2020): கடின உழைப்பே வெற்றிக்கான வழி என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்‍கப்படுத்தும் நிகழ்ச்சி, டெல்லி Talkatora மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. மோதி, மாணவர்கள், தேர்வை அச்சமின்றி எழுதவும், பதற்றமின்றி அணுகவும் அறிவுரை வழங்கினார். அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை அனைவருமே சந்திப்போம் என்றுக்‍ கூறிய பிரதமர், அதனை எப்படி எதிர்‍கொள்ள வேண்டும் என்பதற்கு, 2001-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா,…

மேலும்...

பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் அட்டூழியம்!

போபால் (20 ஜன 2020): போபாலில் பாஜகவினர் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலி பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசும்…

மேலும்...

இந்தியாவில் தொழில் நடத்த அச்சமாக உள்ளது – டாட்டா சன்ஸ் நிறுவனம் பகீர் தகவல்!

மும்பை (20 ஜன 2020): இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு அச்சமாக உள்ளது என்று டாட்டா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். என்று தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை…

மேலும்...

பாஜக வேட்பாளரை வீழ்த்தி மேயர் ஆனார் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம்!

மைசூரு (19 ஜன 2020): மைசூரு மேயர் பதவிக்கான தேர்தலில் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம் வெற்றி பெற்று மைசூரு மேயர் ஆனார். மைசூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் தஸ்னீமுக்கு கிடைத்துள்ளது. மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தஸ்னீம் போட்டியிட்டார். பாஜக சார்பில் கீதாஸ்ரீ யோகானந்த் போட்டியிட்டார். கீதாவை வீழ்த்தி தஸ்னீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்லீம் மைசூரின் 33-வது மேயராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...