தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இது தமிழகத்திலும் அதன் வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் புதன் கிழமை மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மேலும்...

இதை நீங்கள் தராமலே இருந்திருக்கலாம் – அதிமுகவினர் மீது பொதுமக்கள் பாய்ச்சல்!

கோவை (06 மே 2020): கோவையில் அதிமுகவினர் ஆட்களுக்‍கு ஏற்றவாறு நிவாரண பொருட்களை வழங்கியதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்களுக்கு கொரொனா நிவாரண பொருட்கள் தருவதாக கூறி அதிமுகவினர் டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மளிகை பொருட்களை பெற்ற பொதுமக்கள், அவை தரமற்றதாக இருப்பதாக குறி அதிமுகவினரிடமே திருப்பிக்கொடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளான முத்தண்ணன்குளம், பால்கம்பெனி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கும், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுகவினர்…

மேலும்...

24 மணிநேரத்தில் கொரோனா குணமாகும் – சித்த மருத்துவர் கைது!

சென்னை (06 மே 2020): கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட முதல் வீடியோவில், கொரோனா மட்டுமல்ல எந்த வைரஸ் வந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொன்னார். இதையடுத்து ஜனவரி 27ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தணிகாசலம், தனது ரத்னா சித்த மருத்துவமனை சார்பில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பிரகடனம்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பட்டு – இதில் இதன் விலை ஏற்றத்தால் குடிமகன்களுக்கு கவலை!

சென்னை (06 மே 2020): மது கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்‍கும் டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடைகள் நாளை முதல் திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது திடீரென மதுபானம் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வகை மதுபானங்களும்…

மேலும்...

சென்னை டிஜிபி அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 மே 2020): சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர், தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேர், மோட்டார் வாகன பிரிவில் ஒருவர் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டிஜிபி அலுவலகத்தில்…

மேலும்...

தமிழகத்தை அதிர வைக்கும் கொரோனா – இப்போதைக்கு இதுதான் சிங்கிள் சோர்ஸா?

சென்னை (06 மே 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில்…

மேலும்...

சென்னையில் அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி!

சென்னை (06 மே 2020): சென்னையில் நாளை அனைத்து தனிக் கடைகளையும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்க, இந்தியாவில், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது….

மேலும்...

அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு முடிவு!

சென்னை (05 மே 2020): அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல்…

மேலும்...

மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...

கொரோனா வைரஸ் – ராகவேந்திரா மண்டபம் குறித்து ரஜினி கூறியது என்ன?

சென்னை (04 மே 2020): சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு தரமுடியாது என்று கூறியதாக வெளியான தகவலுக்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார்,…

மேலும்...