மது போதையில் தகராறு – போலீசுக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை!

திண்டுக்கல் (14 பிப் 2020): திண்டுக்கல் அருகே போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலரை பொதுமக்கள் நன்றாக கவனித்து அனுப்பினர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் பாண்டியராஜன். இவர் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஒருவர் மீது மோதியுள்ளார். யார் மீது மோதினாரோ அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் பாண்டியராஜன். மேலும் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் பாண்டியராஜனை நன்றாக…

மேலும்...

தமிழக பட்ஜெட்டின் (2020) முக்கிய அம்சங்கள்!

சென்னை (14 பிப் 2020): 2020- 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார். பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது. கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்…

மேலும்...

ஐலவ்யூ விஜய் – பாஜகவின் திடீர் பாசம்!

கோவை (13 பிப் 2020): நடிகர் விஜயை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கிறேன் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. . கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் குமரியில் கொலை செய்யப்பட்டுள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸின் பெயர் மாற்றம் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

நியூயார்க் (13 பிப் 2020): கொரோனா வைரஸின் பெயர் இனி கோவிட் – 19 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய தகவலின் படி கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட மாணவியை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி!

திருச்சி (13 பிப் 2020): திருச்சியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஐந்து மாத குழந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூறப்படுவதாவது: திருச்சி பீமநகரைச் சோ்ந்த 21 வயது மாணவி, தனியாா் கல்லூரியொன்றில் பி.காம். படித்து வருகிறாா். இவருக்கும் எதிா் வீட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவரத்தை தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவியின் படிப்பு முடிந்த பின்னா் திருமணத்தை…

மேலும்...

தொடரும் தீண்டாமை கொடுமை – 430 க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர்!

கோவை (12 பிப் 2020): தொடரும் தீண்டாமை கொடுமை காரணமாக கோவையில் 430க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் நிறைவேறியது!

புதுச்சேரி (12 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி…

மேலும்...

வகுப்புவாதத்தை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் – ஸ்டாலின்!

சென்னை (11 பிப் 2020): வகுப்பு வாதங்களை வளர்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர்; வகுப்புவாத அரசியலை வளர்ச்சி திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய ஆர்வத்தையும் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (11 பிப் 2020): ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்சிஆர், சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த…

மேலும்...

டெல்லி வெற்றி திமுகவுக்கு உற்சாகம் – ஏன் தெரியுமா?

சென்னை (11 பிப் 2020): டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அசுர வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பரப்புரை உத்திகளை வகுத்து தரும் பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு…

மேலும்...