சிறு துரும்பையும் பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள் – ம.செ க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (26 ஜூன் 2021): சென்னை அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தொடர்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசிய போது, சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்…

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...

சென்னை நர்ஸுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று!

சென்னை (24 ஜூன் 2021): சென்னையில் ‘டெல்டா பிளஸ்’ தொற்றால் நர்ஸ் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. பெங்களூரு வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 1,159 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 554 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சென்னையை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு இருந்தது…

மேலும்...

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

சென்னை (24 ஜூன் 2021): தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் பல ஊழல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்குப் பிறகு கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். கூட்டத்தொடரின்…

மேலும்...

எச்.ராஜா மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக நிர்வாகிகள்!

காரைக்குடி (24 ஜூன் 2021): எச்.ராஜாவுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அனால் இந்த தோல்விக்கு கரணம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் என குற்றம் சாட்டுகிறார். இந்த நிலையில் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் பாலா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம்…

மேலும்...

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் – பாமகவுக்கு ஸ்டாலின் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜிகே மணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் . இது குறித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொரோனாவை குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்து இருக்கிறோம்….

மேலும்...

உதயநிதியின் பரபரப்பு கடிதம்!

சென்னை (23 ஜூன் 2021): நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு உதயநிதி மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், “நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள குழுவின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களுக்கும் குழுவினருக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள். இந்தக்குழு தமிழ்நாட்டின் பெற்றோர், மாணவர், ஆசிரியர், அறிவுசார் குழுக்கள் என அனைத்து…

மேலும்...

நீட் தேர்வுக்கு தடை – பாஜக அந்தர் பல்டி!

சென்னை (23 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு,…

மேலும்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி…

மேலும்...

முன்னாள் அமைச்சருக்கு நடிகையுடன் தொடர்பு – எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும் – பகீர் கிளப்பும் புகழேந்தி!

சென்னை (22 ஜூன் 2021): முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி பீதியை கிளப்பியுள்ளார். நடிகை சாந்தினியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இந்நிலையில்தான், புகழேந்தி ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. இது பற்றி செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசும்போது , “மணிகண்டன் முதலில்…

மேலும்...