கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

கொரோனா பயங்கரம் – பலி எண்ணிக்கை 563 ஆக உயர்வு!

பீஜிங் (06 பிப் 2020):கொரோனா வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் சீனா தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அங்கு சுமார் 28,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வூஹான் நகர மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வரும் நிலையில், 2 புதிய தற்காலிக மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,…

மேலும்...

மூன்றாக நொறுங்கிய விமானம் – 176 பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்!

இஸ்தான்பூல் (06 பிப் 2020): துருக்கி விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது….

மேலும்...

அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

கொரோனா வைரஸ்: 400 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – உதவியை நாடும் சீனா!

பீஜிங் (04 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 425 ஐ தொட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’ வைரஸ்…

மேலும்...

இந்தியாவை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் மாணவர்கள் கதறல்!

பீஜிங் (03 பிப் 2020): சீனாவில் பயிலும் பாகிஸ்தான் மாணவர்கள் மீட்கப் படாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோர் மீட்கப் பட்டு வரும் நிலையில், வுஹான் நகரில் பயின்று வரும் பாகிஸ்தானை சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள் தங்களையும் மீட்க வேண்டும் என பாகிஸ்தான்…

மேலும்...

லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும்...

கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே நடந்த முதல் மரணம்!

மணிலா (02 பிப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பாப் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகியுள்ளார். சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது…

மேலும்...

அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி!

புளோரிடா (02 பிப் 2020): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர் மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். விக்டரி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் மர்ம நபர் திடீரென தனது துப்பாக்கியால் 13 முறை சுட்டார். இதில் ஒரு ஆண் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

மேலும்...

ஐபோனுக்கு ஆபத்து – அதிர்ச்சி தகவல்!

நியூயார்க் (01 பிப் 2020): ஐபோன் மிகவும் பாதுகாப்பானது என்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும், iOS இயங்குதளம் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, Hack செய்ய கடினமான ஒன்று என கூறப்பட்டது. ஆனால் ஆண்ட்ராய்டு போனை காட்டிலும் எளிதாக Hack செய்ய முடிகிறது என வெளியாகியுள்ள தகவல் iphone பிரியர்களிடையே…

மேலும்...