சென்னை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் நடந்த திருமணம்!

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறியுள்ளது. இங்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு திருமணம் நடைபெற்றது. நிக்காஹ் முடிந்த நிலையில் மணமக்கள் கையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தை வைத்துக்கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா அரசு தீர்மானம் – முதல்வர் முடிவு!

ஐதராபாத் (17 பிப் 2020): மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் கூட எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர். 2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் வண்ணாரப்பேட்டையில்…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் நான்காவது நாள் போராட்டம் – வீடியோ!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது. இதனை தொடர்ந்து…

மேலும்...

சென்னை ஷாஹீன் பாக் – முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை குவியும் கூட்டம் -வீடியோ!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர். மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். நாளை சட்டசபை தொடங்கும் நிலையில் சென்னை ஷாஹின் பாக் போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

சென்னை ஷஹீன்பாக்: பிப் 19 ல் அனைத்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – VIDEO

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 19ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிட அனைத்து மாவட்ட மக்களும் முடிவு செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று மாலை சந்தித்தனர். அதன் பின் “தேசிய குடிமக்கள்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோடிக்கணக்கான கையெழுத்துக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (16 பிப் 2020): CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை மண்ணடியும் போராட்டக் களமானது!

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் மீதான போலீஸ் தாக்குதலை எதிர்த்து சென்னை மண்ணடியில் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மண்ணடியில் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம்…

மேலும்...