CBSE பள்ளிகளில் ஆன்லைன் பயிற்சி – பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!

புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது. பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில்…

மேலும்...

கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக…

மேலும்...

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச்…

மேலும்...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!

புதுடெல்லி (25 மே 2020): கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக…

மேலும்...

மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர். மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத…

மேலும்...

அதிமுக செயல்பாடு குறித்து ஜி.கே.வாசன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழக அரசு இப்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு இடையில் எதிர்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் எடுபடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி M.P. பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

சென்னை (24 மே 2020): தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 833 பேர்…

மேலும்...

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (24 மே 2020): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார். மேலும் பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் மறுத்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்ட பள்ளிகளின்…

மேலும்...

சென்னையில் கட்டுப்படாத கொரோனா – சிறப்பு வார்டாக மாறும் விளையாட்டு அரங்கம்!

சென்னை (24 மே 2020): சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படாத நிலையில் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா…

மேலும்...