துபாயில் முக்கிய சாலைகளில் வாகனங்களுக்கான வேக வரம்பு மாற்றம்!

துபாய் (13 ஜன 2023): துபாயின் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது. தற்போதுள்ள அதிகபட்ச வேகமான 100 கிமீ வேகம் மணிக்கு 80 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. துபாய் காவல்துறை தலைமையகம் மற்றும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. 100 கிமீ வேக…

மேலும்...

துபாயில் குடிவரவு அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் வசதி!

துபாய் (12 ஜன 2023): துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வீடியோ அழைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குடிவரவு அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். துறையின் இணையதளம் மூலம் இந்த புதிய சேவை சாத்தியமாகும். பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிட்ட இணையதளத்தில் வழங்குவதன் மூலம் நீங்கள் சில நிமிடங்களில் குடிவரவு அதிகாரிகளுடன் தொடர்பு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் இந்த மாதம் முதல் புதிய பேருந்து கட்டணம்!

துபாய் (04 ஜன 2023): அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து கட்டணம் இம்மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் டிக்கெட்டுகளை மஸார் அட்டை அல்லது நேரடி கட்டணம் மூலம் வாங்கலாம். துபாய் செல்லும் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பஸ் கட்டணம் மஸார் அட்டை மூலம் செலுத்தினால் 3 திர்ஹமும், பணமாக…

மேலும்...

துபாய் ஷேக் ரஷித் பின் சயீத் நடைபாதை மறு சீரமைப்பு முதல் கட்டம் நிறைவு!

துபாய் (26 டிச 2022): துபாய் ஷேக் ரஷீத் பின் சயீத் காரிடார் புனரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. துபாய்-அல் ஐன் சாலை சந்திப்பில் இருந்து நாட் அல் ஹமர் வரையிலான நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், துபாய் க்ரீக் துறைமுகத்திற்கான அனைத்து பாலங்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​ஒரு மணி நேரத்திற்கு 10,600 வாகனங்கள் கடந்து செல்கின்றன….

மேலும்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது. முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க். அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் 18 வயதுக்குட்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வது உட்பட பல விதிகளைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மனிதவள அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டத்தை அறிவித்தது. புதிய சட்டத்தின்படி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

துபாய் (14 டிச 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசாவில் இருப்பவர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி பின்னரே விசாவை புதுப்பிக்க வேண்டும்; இந்த நடைமுறை ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு பொருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட்விசாவில் இருப்பவர்களுக்கு நாட்டிற்குள்ளிருந்து விசாவை மாற்றும் வசதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. ஆனால் துபாயில் தற்போதைய நிலையே தொடரும். புதிய முடிவின் மூலம், உங்கள்…

மேலும்...

மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.  

மேலும்...

துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய் (10 டிச 2022): கேரளாவிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டில் இருந்து சென்றது. சனிக்கிழமை துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். மேலும் விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

மேலும்...

சக ஊழியரை மிரட்டிய மேலாளருக்கு அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம்!

துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது. மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும், அவரது மகனையும் கொன்றுவிடுவதாக மேலாளர் மிரட்டியுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தால் 10000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலாளர் தன்னையும் தனது எட்டு வயது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த…

மேலும்...