மலேசியாவுக்கு உதவ இந்தியா முடிவு!

புதுடெல்லி (16 ஏப் 2020): மலேசியாவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை கோரியதால் இந்தியா வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஜம்மு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு!

புதுடெல்லி (16 ஏப் 2020): இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது….

மேலும்...

கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் – ராகுல் காந்தி!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “வளைகுடா நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது – 339 பேர் பலி!

புதுடெல்லி (14 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, 200 க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய…

மேலும்...

கொரோனா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுல்சில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (10 ஏப் 2020): இந்தியாவில் எந்த வித பயணமும் மேற்கொள்ளாமல், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளாத நிலையில் 40 சதவீதத்தினர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை. இந்த குறிப்பிட்ட…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (07 ஏப் 2020): மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு சர்ப்பரைஸ் காத்திருக்கிறது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் அமெரிக்கா பெரும் பாதிப்பை கண்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா இந்த நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர்…

மேலும்...

இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர். இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர். மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2…

மேலும்...