மக்களின் வேதனையை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் காய்கறி வியாபாரிகள்!

சென்னை (26 மார்ச் 2020): நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நேரத்தில் காய்கறிகளின் விலையை இரட்டிப்பாக்கி காசு பார்க்கின்றனர். காய்கறி வியாபாரிகள். கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்ற கறிகளை விட காய்கறிகளையே அதிகம் விரும்புகின்றனர். தேவை அதி­க­ரித்­ததை அடுத்து கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் கத்­தி­ரிக்­காய், உருளை உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­தது. கடந்த இரு தினங்­க­ளுக்கு…

மேலும்...

ஸ்பெயினில் ஒரே நாளில் பலரை பலி வாங்கிய கொரோனா – துணை பிரதமரையும் தாக்கியது!

ஸ்பெயின் (26 மார்ச் 2020): ஸ்பெயினில் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 656 பேர் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3647 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் துணை…

மேலும்...

கொரோனா பரவலை அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ► மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள்…

மேலும்...

ஒரேஒரு டாக்டருக்கு கொரோனா – 800 பேர் தனிமையில்!

புதுடெல்லி (26 மார்ச் 2020): டெல்லியின் மௌஜ்பூரில், ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை அடுத்து 800 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது. ஸ்பெயினின் கொரோனாவினால் ஒரே நாளில் 700 பேர் இறந்தனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்….

மேலும்...

சாம்பிள்-9 – சிறுகதை

இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்றுகொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது. சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து, ஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது. பின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு?” என்றான். “அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய்…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சிறையிலிருக்கும் டாக்டர் கஃபீல் கான் கடிதம்!

லக்னோ (26 மார்ச் 2020): கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டிய நேரம் இது. எனவே நாட்டில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு என்னால் ஆன முயற்சியையும் மேற்கொள்ளும் விதமாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன். மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்தது…

மேலும்...

விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது – ஆசிரமத்திற்கு சீல்!

லக்னோ (26 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு….

மேலும்...

கேரளாவில் எச்ஐவி மருந்து மூலம் குணமடைந்த கொரோனா நோயாளி!

எா்ணாகுளம் (26 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப் பட்ட நோயாளிக்கு சோதனை முறையில் எச் ஐ வி மருந்து கொடுக்கப்பட்டு, அவர் தற்போது குணமடைந்துள்ளார். இதுகுறித்து எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, எா்ணாகுளம்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும்…

மேலும்...

மனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி!

இஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஃரிடியை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்” உண்மையில் மிக உண்ணதமான சேவையை செய்கிறீர்கள் அஃப்ரிடி. மனிதநேயமிக்க உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. உங்களுக்கு இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும். உலகில் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்”…

மேலும்...