நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
புதுடெல்லி (21 ஆக 2020): பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்படடுகின்றன. என்று பிரஷாந்த் பூஷன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து…
