ஹஜ் யாத்திரையில் காணாமல் போகும் ஹஜ் யாத்திரீகர்களை கண்டுபிடிக்க கூடுதல் வசதி!

மக்கா (21 பிப் 2020): ‘ஸ்மார்ட் ஹஜ்’ (Smart Hajj) என்ற புதிய நடைமுறை 2021 ஹஜ் முதல் மேலும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று சவூதி ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்மார்ட் ஹஜ்’ (மொபைல் ஆப்) என்ற நடைமுறை ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட போதும், அதில் மேலும் கூடுதல் தொழில் நுட்பங்கள் இணைக்கப்படவுள்ளன. அதன்…

மேலும்...

சவூதியில் வாகனம் ஓட்டுபவர்களே எச்சரிக்கை!

ரியாத் (13 பிப் 2020): சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொறுத்தி சவூதி போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவூதியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் பல சாலைகளில் புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவோ, அல்லது உரிமம் ரத்துச் செய்யப்படவோ வாய்ப்பு உள்ளது. மேலும் தான் செல்லும் ட்ராக்கை அவசியமில்லாமல் விதிகளை மீறி மாறினாலும் கேமரா கண்டுபிடித்து எச்சரித்துவிடும். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அபராதங்கள் செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம்…

மேலும்...

தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது. தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை,…

மேலும்...

கத்தார் தேசிய விளையாட்டு தினம்!

தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா…

மேலும்...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு கத்தார் செய்த உதவி!

தோஹா (05 பிப் 2020): சீனாவிற்கு மருந்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கத்தாருக்கான சீன தூதுவர் Zhou Jian அவர்கள் தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்தாரிலிருந்து சீனாவிற்கு மருத்துவ உதவி பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன. அதில் முகமூடிகள், கையுறைகள் உட்பட மருந்துப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக Zhou Jian தெரிவித்துள்ளார். மேலும், கத்தார் நாடும் சீனாவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆரோயக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கத்தார்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு…

மேலும்...

சீனாவுக்கான சவூதி ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து!

ரியாத் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவுக்கான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனாவுக்கான விமான போக்குரவத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் சவூதி அரேபியாவும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து தொடரும் என்றும்…

மேலும்...

துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...