டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ!

புதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது விபத்தா? அல்லது வேறு எதுவும் சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடெங்கும் ஊரடங்கு…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர். இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே…

மேலும்...

எங்கே அமித்ஷா? -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அமித்ஷா எங்கே”என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலானது வகுப்பு கலவரமாக மாறி 40 உயிரை காவு வாங்கியபோதும் சரி.. அமித்ஷா அமைதி காத்தது சர்ச்சைக்குள்ளானது. டெல்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி…

மேலும்...

பிரதமரின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் பரிதவித்த 14 பெண்கள் – துரிதமாக மீட்ட பிணராயி விஜயன்!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): பிரதமர் மோடியின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் ஆள் அரவமற்ற பகுதியில் பரிதவித்த பெண்களை கேரள முதல்வர் பிணராயி விஜயன் துரிதமாக செயல்பட்டு மீட்டு அவரவர் வீட்டில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் மக்களுக்கு எதிரான எந்த பிரச்சனையானாலும் தன் மாநில மக்களுக்காக துணிந்து நின்று தனி மனிதனாக போராடுபவர் பிணராயி விஜயன். குடியுரிமை சட்ட விவகாரத்திலும் அச்சட்டத்தை எதிர்த்து துணிந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தார். அந்த…

மேலும்...

தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின்னர் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார்….

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர். மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2…

மேலும்...

பால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்!

கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா பரவலை அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ► மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள்…

மேலும்...

ஒரேஒரு டாக்டருக்கு கொரோனா – 800 பேர் தனிமையில்!

புதுடெல்லி (26 மார்ச் 2020): டெல்லியின் மௌஜ்பூரில், ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதை அடுத்து 800 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது. ஸ்பெயினின் கொரோனாவினால் ஒரே நாளில் 700 பேர் இறந்தனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்….

மேலும்...

பிரதமர் மோடிக்கு சிறையிலிருக்கும் டாக்டர் கஃபீல் கான் கடிதம்!

லக்னோ (26 மார்ச் 2020): கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டிய நேரம் இது. எனவே நாட்டில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு என்னால் ஆன முயற்சியையும் மேற்கொள்ளும் விதமாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன். மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்தது…

மேலும்...