தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (25 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

மேலும்...

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் வித்தியாசமான பெருநாள் வாழ்த்து – வீடியோ!

சென்னை (25 மே 2020): இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது  பெருநாள் வாழ்த்தை ஒரு நடனம் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ள திவ்ய தர்ஷினி, உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். EID MUBARAQ to all my…

மேலும்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 மே 2020): அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

மேலும்...

மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர். மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத…

மேலும்...

அதிமுக செயல்பாடு குறித்து ஜி.கே.வாசன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழக அரசு இப்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு இடையில் எதிர்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் எடுபடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி M.P. பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

சென்னை (24 மே 2020): தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 833 பேர்…

மேலும்...

அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்!

சென்னை (24 மே 2020): அதிமுகவில் முதல்வர் எடப்பாடியின் நாடார் எதிர்ப்பு கொள்கை நாடார் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து கடந்த மாதம் பறிக்கப்பட்ட விருதுநகர் மா.செ. பதவி, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாக பதவிகள் ஆகியவைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு…

மேலும்...

ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு!

சென்னை (24 மே 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்ததற்கு அவரின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் வாழ்ந்து மறைந்த வீடாகும். இதனை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை மேற்பார்வை செய்ய அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி…

மேலும்...

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை – வீட்டிலேயே தொழுதுகொள்ள கோரிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழகம் முழுவதும் நாளை, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி நேற்று அறிவித்தார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை, ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார். பிறை நேற்று தென்படாததால், திங்கள் கிழமை அன்று,…

மேலும்...

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (24 மே 2020): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார். மேலும் பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் மறுத்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்ட பள்ளிகளின்…

மேலும்...