கமல் சீமான் கட்சிகளின் வாக்குகளால் யாருக்கு பாதகம்? – சர்வேயில் இறங்கிய பாஜக!

சென்னை (15 ஏப் 2021): 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு நேரடி போட்டி இருந்தாலும் வாக்குகளை கணிசமான அளவில் சீமான் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்ந்து உள்ளது. அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அனுப்பிய…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா கைமீறிவிட்டது – தமிழக அரசு தகவல்!

சென்னை (15 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறிவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால்,…

மேலும்...

தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரத்தில் அதிரடியில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ – குவியும் பாராட்டுக்கள்!

மன்னார்குடி (14 மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்து வரவேற்பை பெற்றுள்ளார். . தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. இதனால் இரவு நேர லாக் டவுன், பகல்…

மேலும்...

மே 2 க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (13 ஏப் 2021): தந்தை பெரியார் சாலை பெயர் மாற்றத்தை மாற்றவில்லையென்றால் மே 2க்குப்பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்தது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் பலர் நீக்கம் – கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

சென்னை (13 ஏப் 2021): அதிமுகவில் நடந்து முடிந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களால் உட் கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை. அதாவது திருமயம் தொகுதியில்…

மேலும்...

சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (12 ஏப் 2021): சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப் ஐ ஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாபர் சாதிக் என்பவர் மீதும் ஒரு சில இளைஞர்கள் மீதும் சி ஏஏ போராட்டத்தின்போது பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் , சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் மீது புகார் செய்தார். இது குறித்த வழக்கு சென்னை…

மேலும்...

கொரோனா தடுப்பூசியில் விளையாடும் மத்திய அரசு – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (09 ஏப் 2021): நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கருத்தில் கொண்டும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி கிடைக்க வகை செய்யும் வகையிலும் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஒருபுறம் கோவிட் வழக்குகள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதை விட்டு உடனடியாக கோவிட் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துவதோடு, அனைத்து மாநிலங்களுக்கும்…

மேலும்...
Durai Murugan

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (08 ஏப் 2021): திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். எனினும்…

மேலும்...

வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!

சென்னை (08 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ-பதிவு அவசியம். தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். நோய்ப்…

மேலும்...

கருப்பு சிவப்பு மாஸ்க், சைக்கிள், நடைபயணம் – வாக்குப்பதிவில் அசத்திய நடிகர்கள்!

சென்னை (06 ஏப் 2021): தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகர்கள் சில அடையாளங்களுடன் வாக்களிக்க வந்தமை பேசுபொருளாகியுள்ளது. இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர்….

மேலும்...