கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

அமெரிக்க அதிபருக்கு கொரோனா சோதனை!

வாஷிங்டன் (15 மார்ச் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும், 116 நாடுகளில், பரவி பலரை பலி வாங்கியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திட நிதியும் ஒத்துக்கினார். இது குறித்து டிரம்ப் அளித்த…

மேலும்...

அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வரும் கோம்ஸ் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பெயின் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

கொரோனாவை வைத்து வியாபாரம் – பள்ளி சிறுவன் சஸ்பெண்டு!

லண்டன் (14 மார்ச் 2020): இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை வைத்து வியாபாரம் செய்த பள்ளிச் சிறுவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம்  செய்துள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆலிவர் கூப்பர். அந்த நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இந்த மாணவன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்தியை ரேடியாவில் கேட்டுள்ளான். உடனே, மெடிக்கல்…

மேலும்...

கொரோனா வைரஸ் – இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் மரணம்!

ரோம் (14 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் 24 மணி நேரத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியை அதிகம் தாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தாலியில் 250 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1266 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கணக்குப்படி கொரோனாவால் இத்தாலியில் 17660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

அமெரிக்காவில் அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க் (14 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதை அடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – சிங்கப்பூரில் அனைத்து மசூதிகளும் தற்காலிக மூடல்!

சிங்கப்பூர் (13 மார்ச் 2020): சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்காமல் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை கூட அங்கு நடைபெறவில்லை. இதுகுறித்து மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கப்பூரா (MUIS) என்ற சிங்கப்பூர்…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 145…

மேலும்...

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

ஸ்பெயின் (12 மார்ச் 2020): ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்பெயின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

ஆர்.எஸ்.எஸ். பிஜேபியைச் சேர்ந்த இந்தியருக்கு அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் கல்தா!

வாஷிங்டன் (12 மார்ச் 2020): அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden) தமக்குத் தொடர்பாளராக நியமித்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் ஜானி என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அமித் ஜானி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பல காலமாக செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அமித் ஜானியை முஸ்லிம் சமூகத் தொடர்பாளராகவும் தேர்தல் பிரச்சாரத்தின் டைரக்டராகவும் நியமித்திருந்தார். ஜோ பிடனின் ஆதரவாளர்கள்…

மேலும்...