எங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

கொல்கத்தா (27 மே 2020): மேற்கு வங்க அரசிடம் தெரிவிக்காமல் 36 இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய…

மேலும்...

விமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து!

மதுரை (27 மே 2020): இரண்டு மாதங்களுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பயணிகள் விமானத்தில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களில் பயணிக்க பயணிகள் வராததால் 1 விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன….

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

தமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி வேகத்தில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும்...

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை…

மேலும்...

கொரோனா நோயாளி தற்கொலை – தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்த மேலும் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக…

மேலும்...

கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்!

ஐதராபாத் (27 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 20 வயது கர்ப்பிணிப் பெண் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, அந்த பெண் நிலூஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கொரோனா சிவப்பு மண்டல மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காந்தி மருத்துவமனையில், டாக்டர் ரேணுகா, மூத்த மருத்துவர்கள் டாக்டர் அபூர்வா, டாக்டர்…

மேலும்...

மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது – பிணராயி விஜயன் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம் (27 மே 2020): மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது கட்டுப்படுத்த நினைக்கவில்லை என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள பிணராயி விஜயன் கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதில் மத்திய அரசின் அவசர நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்…

மேலும்...

நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): கொரோனா பரவல் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி முக்கிய வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஹார்வோர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் அஷீஷ் ஷாவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து குறித்து ராகுல் காந்தியிடம் பேசிய அஷீஷ் ஷா, கொரோனா தடுப்பில் மூன்று தடுப்பு மருந்துகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவை சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கும்…

மேலும்...

சுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை!

ஸ்பெயின் (26 மே 2020): ஜூலை 1 ஆம் தேதி முதல் 14 நாட்கள் கோரைன்டைன் வைக்கமாட்டோம் என்றும் சுற்றுலா பயணிகள் ஸ்பெயினுக்கு வரலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 8 கோடி மக்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் ஜிடிபி-யில் 12 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கிறது. 2.6 மில்லியன் வேலைவாய்ப்பை மக்கள் பெற்று வருகிறார்கள். கேனரி மற்றும்…

மேலும்...