பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து,…

மேலும்...

உங்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியுமா? – சோனியா காந்திக்கு பாஜக பதில்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு, சோனியா காந்தி மத்திய அரசை குறை கூறும் செயல், தரம் தாழ்ந்த அரசியல் என பாஜக தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம், திட்டமிட்ட சதி என திருமதி. சோனியா தெரிவித்துள்ளது, கண்டனத்துக்‍குரியது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார். சீக்கியர்களின் ரத்தக்கறை படிந்துள்ள காங்கிரஸ், டெல்லி கலவரத்தை வைத்து தரமற்ற அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அமைதியை உறுதிபடுத்த வேண்டிய தருணத்தில், திருமதி. சோனியாவின் கருத்து, காவல்துறையின் மன…

மேலும்...

பாஜக தலைவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்? முழு டெல்லியும் எரிந்த பிறகா?: நீதிபதி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு முன்பு வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான முரளிதரன் தலைமையிலான அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இந்த வழக்கில் தான் கேட்கும் அனைத்து…

மேலும்...

டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

பாட்னா (26 பிப் 2020): பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்புக்கு எதிராக, அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிகாா் சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு சட்டப் பேரவை விவகாரங்கள்…

மேலும்...

பற்றி எரியும் டெல்லி – இருவர் பலி!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது. ஏற்கனவே டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா…

மேலும்...

டெல்லி போராட்டக் காரர்களுக்கு பாஜக தலைவர் 3 நாட்கள் கெடு – போலீசுக்கும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லி ஜாஃப்ராபாத் போராட்டக் காரர்கள் மூன்று நாட்களில் கலைந்து செல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கெடு விதித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000…

மேலும்...

பாஜகவில் இணைந்தார் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்!

சென்னை (23 பிப் 2020): சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். இந்நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் நிர்வாகியாக உள்ள வீரப்பனின் மனைவி, மகள் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டர்.

மேலும்...

நேருவின் வரலாற்றை அழிக்க முடியாது – மன்கோகன் சிங்!

புதுடெல்லி (22 பிப் 2020): ” நேரு உருவாக்கிய பாரத் மாதாகி ஜே என்ற வாசகம் ஒரு சாராரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது,” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் மற்றும் உரைகள் குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில் உரையாற்றிய மன்மோகன் சிங், பாஜகவை நேரடியாகவே குற்றம் சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், “நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். உண்மையில் அவரை நினைத்து பெருமைப் படுகிறேன்….

மேலும்...

பாஜக பி டீம் – உறுதி படுத்துகிறதா ஆம் ஆத்மி?

புதுடெல்லி (21 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சி தற்போது பாஜக எதிர்ப்பிலிருந்து சற்று விலகி இருப்பதாகவே சமீபத்திய நகர்வுகள் தெளிவு படுத்துகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஹனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை என்பது அவரவரவர் விருப்பம் என்பதால் இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ் கூறியிருக்கும் கருத்துதான் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ‘பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்’ என உச்ச…

மேலும்...